Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

மதுபானங்களை ஏற்றி வந்த வாகனம் விபத்து..’’.சரக்குகளை’’ அள்ளிச் சென்ற மக்கள்...

மதுபானங்களை ஏற்றி வந்த வாகனம் விபத்து..’’.சரக்குகளை’’ அள்ளிச் சென்ற மக்கள்...
, வெள்ளி, 10 ஜூலை 2020 (19:05 IST)
திண்டுக்கல் மாவட்டம் வேடசந்தூரில் அரசு மதுபானங்களை ஏற்றி  வந்த லாரி கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. இதனால் அப்பகுதியில் உள்ள மதுப்பிரியர்கள் வந்து பல மதுபாட்டில்களை வாரி எடுத்துச் சென்றவர். இந்த புகைப்படங்கள் வைரல் ஆகி வருகிறது.

திண்டுக்கல் மாவட்டம் வேடச்சந்தூர் அருகே உள்ள தாமரைப்பட்டியில் அரசு  மதுபானங்களை ஏற்றி வந்த லாரியின் திடீரென கவிழ்ந்து விபத்துக்குள்ளானது.

இந்த விபத்தில் லாரியின் ஓட்டுநர்கள் சில காயங்களுடன் உயிரி தப்பினர். இதனைப் பார்த்த மக்கள் ஒட்டுநர்களைக் காப்பாற்றாமல் மதுப்புட்டிகளை எடுத்துச் செல்வதில்தான் ஆர்வம் காட்டினர். ஓட்டுநர்கள் வேடசந்தூர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

 இந்த சம்பவம் குறித்து வழக்குப் பதிவு செய்துள்ள போலீஸார் விசாரித்து வருகின்றனர்.

 ஓட்டுநர்களைக் காப்பாற்றாமல் மதுபானங்களை எடுப்பதில் குறியாக இருந்த மக்களை பலரும் திட்டி வருகின்றனர்.
 

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

தமிழகத்தில் கொரோனா பாதிப்பு 3680, டிஸ்சார்ஜ் 4163: மீண்டு வருகிறதா தமிழகம்?