Webdunia - Bharat's app for daily news and videos

Install App

2 தொகுதிகளுக்கு ஒப்புக்கொண்டது ஏன்? திருமாவளவன் விளக்கம்..!

Mahendran
வெள்ளி, 8 மார்ச் 2024 (15:10 IST)
திமுக கூட்டணியில் இடம்பெற்றிருக்கும் விடுதலை சிறுத்தைகள் கட்சி மூன்று தொகுதிகள் கேட்டதாகவும் அதில் ஒரு தொகுதி பொது தொகுதி என்றும் மூன்று தொகுதிகளிலும் தங்கள் கட்சியின் சின்னத்தில் தான் போட்டியிடுவோம் என்று நிபந்தனை விதித்ததாகவும் கூறப்பட்டது.

ஆனால் இன்று திமுக மற்றும் விடுதலை சிறுத்தைகள் கட்சிகள் இடையே நடந்த ஒப்பந்தத்தில் இரண்டு தனி தொகுதிகளான விழுப்புரம் மற்றும் சிதம்பரம் ஆகிய இரண்டு தனி தொகுதிகள் மற்றும் பெற்றுக் கொண்டு திருமாவளவன் கையெழுத்திட்டு இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது

இந்த நிலையில் இது குறித்து விசிக தலைவர் திருமாவளவன் விளக்கம் அளித்த போது ’அரசியல் சூழலை கருத்தில் கொண்டு கடந்த தேர்தலை போலவே இந்த தேர்தலிலும் கூட்டணி கட்டுகோப்பாக இயங்கி ஒட்டுமொத்த வெற்றியும் பெற வேண்டும் என்ற நோக்கத்தில் இரண்டு தனித் தொகுதியில் போட்டியிட விடுதலை சிறுத்தைகள் கட்சியை உடன்பாடு தெரிவித்திருக்கிறது

திமுக எங்களுக்கு தொகுதியை கொடுத்தது என்பதை விட நாங்கள் அனைவரும் சேர்ந்து தொகுதியை பகிர்ந்து கொண்டோம் என்பதுதான் எதார்த்தமான உண்மை. மன நிறைவோடு இந்த ஒப்பந்தத்திற்கு கையெழுத்திட்டு இருக்கிறோம் என்று கூறியுள்ளார்.

Edited by Mahendran

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

Operation Mahadev: சுட்டுக்கொல்லப்பட்ட தீவிரவாதிகள் யார்? இந்தியாவில் அவர்கள் செய்த நாசவேலை!

இந்தியப் பங்குச்சந்தை 3-வது நாளாக சரிவு: சென்செக்ஸ், நிஃப்டி வீழ்ச்சி!

பெற்றோர் பெயருடன் நாய்க்கு இருப்பிட சான்று.. அதிகாரிகளின் அலட்சியத்தால் பரபரப்பு..!

ஆன்லைனில் தூக்க மாத்திரை வாங்க முயற்சித்த மூதாட்டி.. ரூ.77 லட்சம் இழந்த பரிதாபம்..!

HIV தொற்றால் பாதிக்கப்பட்ட இளைஞர்.. கெளரவத்தை காப்பாற்ற குடும்ப உறுப்பினர்களே கொலை செய்தார்களா?

அடுத்த கட்டுரையில்
Show comments