Webdunia - Bharat's app for daily news and videos

Install App

மதுரை கலெக்டரை மாற்ற கோரி விசிக மறியல் போராட்டம்: பெரும் பரபரப்பு..!

Mahendran
வியாழன், 1 மே 2025 (17:12 IST)
மதுரை மாவட்டம் மேலூர் அருகே உள்ள சிட்டம்பட்டியில் டோல்கேட் இயங்கி வருகிறது. தினமும் பல ஆயிரம் வாகனங்கள் இந்த வழியாக சென்னைக்கும், திருச்சிக்கும் செல்கின்றன.
 
இன்று மதிய நேரத்தில், விடுதலை சிறுத்தைகள் கட்சி மதுரை மாவட்ட செயலாளர் அரசமுத்துப்பாண்டியன் மற்றும் மேலூர் தொகுதி செயலாளர் அய்யாவு ஆகியோர் தலைமையில், 500-க்கும் மேற்பட்ட கட்சி ஆதரவாளர்கள், பெண்கள் உட்பட, டோல்கேட்டை முற்றுகையிட்டு அமர்ந்து போராட்டம் நடத்தினர்.
 
அவர்கள் "மதுரை மாவட்ட கலெக்டர் எங்கள் கட்சியின் கூட்டங்களை தடை செய்கிறார், கொடியேற்ற விழாவுக்கு இடையூறு செய்கிறார்" என குற்றம்சாட்டி, அவரை உடனே மாற்ற வேண்டும் என தமிழ்நாடு அரசை வலியுறுத்தினர்.
 
மறியலால் டோல்கேட் முன் வாகனங்கள் நின்றுவிட்டன. சுமார் அரை மணி நேரத்துக்கு மேல் இருபுறத்திலும் ரோட்டில் வாகனங்கள் குவிந்து நின்றதால் பொதுமக்கள் பெரிதும் சிரமம் அடைந்தனர்.
 
தகவல் கிடைத்ததும் மேலூர் டிஎஸ்பி சிவக்குமார், இன்ஸ்பெக்டர் சிவசக்தி மற்றும் சப்-இன்ஸ்பெக்டர் ஆனந்தஜோதி ஆகியோர் அந்த இடத்திற்கு வந்து பேச்சுவார்த்தை நடத்தினர். அதன் பிறகு, போராட்டக்காரர்கள் தங்களது முற்றுகையை நிறுத்தினர்.
 
Edited by Mahendran
 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

5 தலைமுறைகளாக முந்திரி பயிர் செய்து வரும் விவசாயிகள்.. 9,000 மரங்களை வேரோடு பிடுங்கி எறிந்ததால் பரபரப்பு..!

பயாப்ஸி சிகிச்சைக்கு வந்த வாலிபர்.. பிறப்புறுப்பை அறுவை சிகிச்சை செய்து நீக்கிய டாக்டர் தலைமறைவு..!

அரசு ஊழியர்களின் ஈட்டிய விடுப்பை சரண் செய்யும் முறை: தமிழக அரசு முக்கிய அறிவிப்பு..!

பரந்தூர், மணல் கொள்ளை, கொள்கை எதிரி, என்.எல்.சி உள்பட தவெகவின் 20 தீர்மாங்கள்.. முழு விவரங்கள்..!

விஜய் தான் முதல்வர் வேட்பாளர்.. கூட்டணி அமைக்க முழு அதிகாரம்: தவெக தீர்மானம்..!

அடுத்த கட்டுரையில்
Show comments