Publish Date: Fri, 17 Apr 2020 (09:43 IST)
Updated Date: Fri, 17 Apr 2020 (09:44 IST)
ஈரானில் 100 மீட்டர் தொலைவுக்குள் கொரோனா பாதித்துள்ளவர்கள் இருந்தால் அதைக் கண்டுபிடிக்கும் கருவியை ஈரான் கண்டுபிடித்துள்ளது.
கொரோனா நோயாளிகளைக் கண்டுபிடிப்பதற்காக பலக் கருவிகள் பயன்படுத்தப்பட்டு வரும் நிலையில் ஈரான் ஒரு புதிய கருவியைக் கண்டுபிடித்துள்ளது. ஈரானின் புரட்சிகர படைப்பிரிவு கண்டுபிடித்துள்ள இந்த கருவியின் மூலம் 100 மீட்டர் தொலைவுக்குள் கொரோனா பாதிக்கப்பட்டவர் இருந்தால் கண்டுபிடிக்கலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.
ஆண்டெனா காட்டும் திசையில் 100 மீட்டருக்குள் வைரஸ் பாதிக்கப்பட்ட பகுதி இருந்தால் அதனையும் கண்டறியும் வகையில் இந்தக் கருவி உருவாக்கப்பட்டுள்ளது. இதனால் பரிசோதனியின் மூலம் கொரோனா பரவுவது கட்டுப்படுத்தப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.