Webdunia - Bharat's app for daily news and videos

Install App

ஜனாதிபதிக்கு முதல்வர் கடிதம் எழுதி இருப்பது முழுவதும் கற்பனை: வானதி சீனிவாசன்

Webdunia
செவ்வாய், 11 ஜூலை 2023 (09:10 IST)
ஜனாதிபதிக்கு முதலமைச்சர் எழுதிய கடிதத்தில் உள்ள அனைத்தும் கற்பனை என பாஜக எம்எல்ஏ வானதி சீனிவாசன் தெரிவித்துள்ளார். 
 
ஒவ்வொரு பிரச்சனைக்கும் ஆளுநர் அலுவலகம் உரிய பதில் கொடுப்பதால் முதல்வருக்கு கோபம் வந்துள்ளது என்றும் கட்சி அரசியலுக்கு ஆளுநர்கள் யாரும் வருவதில்லை என்றும் அதை நாம் வேறுபடுத்தி பார்க்க வேண்டும் என்றும் தெரிவித்தார். 
 
எந்த ஒரு மாநில அரசையும் சட்டவிரோதமாக கலைக்கும் எண்ணம் பாஜகவுக்கு இல்லை என்றும் ஆனால் அதே நேரத்தில் தமிழக அரசை கலைப்பதற்கான அனைத்து காரணங்களும் தமிழகத்திற்கு உள்ளது என்றும் அவர் தெரிவித்தார். 
 
எதற்காக முதல்வருக்கு இந்த திடீர் பயம் வந்திருக்கிறது என்று தெரியவில்லை என்றும் அரசு அலுவலங்களில் பெறப்படும் லஞ்சம் மற்றும் சட்டம் ஒழுங்கு விஷயத்தில் முதல்வர் கவனம் செலுத்த வேண்டும் என்றும் அவர் தெரிவித்தார். 
 
மேலும் அண்ணாமலை தனக்கும் எந்த விதமான பிரச்சினையும் இல்லை என்றும் இருவரும் அக்கா தம்பி போல் ஒற்றுமையாக கட்சியில் செயல்பட்டு வருகிறோம் என்றும் அவர் கூறினார்.
 
Edited by Siva

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

9ஆம் வகுப்பு மாணவியை கர்ப்பமாக்கிய பள்ளி முதல்வர்.. போஸ்கோ சட்டத்தில் வழக்கு..!

2026 தேர்தலில் அண்ணாமலை போட்டியிட மாட்டார்.. பாஜக வட்டாரங்கள் பரப்பும் தகவல்..!

சு.வெங்கடேசனுக்குக் கொலை மிரட்டல் விடுவதா? கமல்ஹாசன் கண்டனம்..!

ரூ.2800 கொடுத்தால் 5ஜி வசதியுடன் ஸ்மார்ட்போன் கிடைக்குமா? முன்னணி நிறுவனத்தின் அசத்தல் அறிவிப்பு..!

1967, 1977 போல் 2026ல் புதிய கட்சி தான் தமிழகத்தில் ஆட்சிக்கு வரும்: விஜய்

அடுத்த கட்டுரையில்
Show comments