Publish Date: Mon, 05 Nov 2018 (14:21 IST)
Updated Date: Mon, 05 Nov 2018 (14:31 IST)
மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழகங்களில் தமிழ் மொழியில் தேர்வு எழுதக் கூடாது என துணைவேந்தரால் உத்தரவு பிறப்பிக்கப்பட்டது.
இதனையடுத்து பல அறிஞர்கள் தமிழ் ஆன்றோர்கள் மற்றும் பேராசிரியர்கள் போன்றோர் ஆங்கில் வழியில் மாணவர்கள் தேர்வு எழுதுவத பல்கலைக்கழகத்தால் கட்டாயப்படுத்தப்படுவதற்கு எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர்.
இந்நிலையில் கவிஞர் வைரமுத்து நீண்ட நாட்களுக்கு பிறகு இவ்விவகாரம் குறித்து டிவிட் செய்துள்ளார்.
அதில் ,'அதிகார மையங்களில் நிலவும் மொழிதான் ஓர் இனத்தில் நிலைபெறும். தேர்வாணையத்தின் வினாத்தாள்கள் கட்டாயம் தமிழிலும் தயாரிக்கப்பட வேண்டும். இந்தக்கருத்தில் மருத்துவர் ராமதாஸ் அவர்களை நான் வழிமொழிகிறேன். விருதுபெற்ற மொழிபெயர்ப்பாளர்களுக்கு நல்லூதியம் வழங்கி நல்ல மொழிபெயர்ப்பைப் பெறலாம். 'இவ்வாறு பதிவிட்டிருக்கிறார்.
webdunia
Publish Date: Mon, 05 Nov 2018 (14:21 IST)
Updated Date: Mon, 05 Nov 2018 (14:31 IST)