Webdunia - Bharat's app for daily news and videos

Install App

அரசு மட்டும் செய்யனும்னா அறம் எதற்காக? – வைரமுத்து ட்வீட்!

Webdunia
திங்கள், 13 ஏப்ரல் 2020 (13:50 IST)
தன்னார்வலர்கள் நிவாரணங்கள் வழங்கக்கூடாது என அரசு அறிவித்ததாக செய்திகள் வெளியான நிலையில், அதற்கு கண்டனம் தெரிவித்து வைரமுத்து கவிதை ஒன்றை பகிர்ந்துள்ளார்.

தமிழகம் முழுவதும் ஊரடங்கு அமலில் உள்ளதால் பாதிக்கப்பட்டுள்ள மக்களுக்கு தன்னார்வலர்கள் பலர் உணவு பொருட்கள் உள்ளிட்டவற்றை வழங்கி உதவி வருகின்றனர். இந்நிலையில் தன்னார்வலர்கள் உணவு வழங்கும்போது சமூக இடைவெளியை கடைபிடித்தல் போன்ற பாதுகாப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படுவதில்லை என புகார்கள் எழுந்ததால் தன்னிச்சையாக தன்னார்வலர்கள் செயல்பட அரசு தடை விதித்துள்ளது.

இதுகுறித்து பல்வேறு சமூக அமைப்புகள், எதிர்க்கட்சிகள் எதிர்ப்புகளை தெரிவித்துள்ளன. இந்நிலையில் இதுகுறித்து ட்விட்டரில் பதிவிட்டுள்ள கவிஞர் வைரமுத்து ” அரசு மட்டும்தான் அருள் செய்ய வேண்டுமென்றால் அறமென்பதெதற்காக? ஆணிவேர் மட்டும்தான் நீர் வழங்க வேண்டுமென்றால் பக்க வேர்கள் எதற்காக?” என கேள்வி எழுப்பியுள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

உயர் ரக சிகிச்சை தேவைப்படுவோர் தனியார் மருத்துவமனைக்கு செல்லுங்கள்: அமைச்சரின் சர்ச்சை பேச்சு

ராய்ட்டர்ஸ் உள்பட 2,355 கணக்குகளை இந்திய அரசு முடக்க சொன்னது: எக்ஸ் அதிர்ச்சி தகவல்..!

திமுகவிடம் மதிமுக 25 தொகுதிகள் கேட்கிறதா? வைகோ விளக்கம்..!

கோவில் கும்பாபிஷேகம் ஒன்றும் அரசியல் நிகழ்ச்சி அல்ல.. செல்வப்பெருந்தகைக்கு பாஜக கண்டனம்..!

பேய் ஓட்டுவதாக கூறி 6 மணி நேரம் தாயை அடிக்க வைத்த மகன்.. அதன்பின் நடந்த விபரீதம்..!

அடுத்த கட்டுரையில்
Show comments