Webdunia - Bharat's app for daily news and videos

Install App

சட்டப்படியும் திட்டப்படியும் கட்டாயம்: புதிய கல்விக்கொள்கை குறித்து வைரமுத்து

Webdunia
வியாழன், 30 ஜூலை 2020 (11:21 IST)
மத்திய அரசு நேற்று புதிய கல்வி கொள்கை குறித்த வழிமுறைகளை அறிவித்தது என்பதும் இந்த அறிவிப்புக்கு அரசியல்வாதிகள் மற்றும் கல்வியாளர்கள் பலரும் ஆதரவும் எதிர்ப்பும் மாறி மாறி தெரிவித்து வருகின்றனர் என்பதும் தெரிந்ததே 
 
இந்த நிலையில் கவிப்பேரரசு வைரமுத்து புதிய கல்வி குறித்து தனது கருத்தை டுவிட் ஒன்றின் மூலம் தெரிவித்துள்ளார். அந்த டுவிட்டில் அவர் கூறியிருப்பதாவது: ஐந்தாம் வகுப்புவரை தாய்மொழியில் கல்வி கட்டாயம் என்று நடுவண் அரசு பொதுவாக வரையறுத்திருப்பது வரவேற்கத்தக்கது. ஆனால், அது அனைத்து வகைப் பள்ளிகளுக்கும் சட்டப்படியும் திட்டப்படியும் கட்டாயம் என்ற உறுதிச் சொற்களால் உரைக்கப்பட வேண்டுமென்று கல்வி உலகம் கருதுகிறது.
 
வைரமுத்துவின் இந்த கருத்துக்கு தமிழறிஞர்கள் பலர் ஆதரவு கொடுத்து வருகின்றனர். அனைத்து வகை பள்ளிகளுக்கும் தாய்மொழி கல்வி கட்டாயம் என்பதை மத்திய அரசு உறுதி செய்ய வேண்டும் என்று அவர்கள் கேட்டுக்கொண்டுள்ளனர்

தொடர்புடைய செய்திகள்

மே முதல் வாரத்தில் தமிழகத்தில் கோடை மழை.. வானிலை ஆய்வு மையம் தகவல்..!

கோவை தேர்தல் முடிவுகளை வெளியிட கூடாது.! சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு..!!

நீர், கனிம வளத்துறை அதிகாரிகளுக்கு சம்மன்? அமலாக்கத்துறை அதிரடி முடிவு..!

மக்கள் பயன்பாட்டிற்கான ஆம்புலன்ஸை கொடியசைத்து தொடங்கி வைத்தார்- அமைச்சர் கே.என்.நேரு!

கண்மாய் மடையை தெய்வமாக வழிபடும் கிராம மக்கள்.280 ஆடுகள் பலியிடப்பட்டு 5 ஆயிரத்திற்கும் மேற்பட்ட ஆண்கள் மட்டும் பங்கேற்ற கிடா விருந்து!

அடுத்த கட்டுரையில்
Show comments