Webdunia - Bharat's app for daily news and videos

Install App

பெரியார் சிலை அவமதிப்பது: கமல், வைரமுத்து கடும் கண்டனம்!

Webdunia
திங்கள், 10 ஜனவரி 2022 (13:00 IST)
மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல்ஹாசனும் கவிஞர் வைரமுத்துவும் பெரியார் சிலையை அவமதிப்புக்கு கண்டனம் தெரிவித்துள்ளனர். 

 
பெரியார் சிலையை அவமதிப்பது தமிழகத்தில் அவ்வப்போது நடந்து வருகிறது. அந்த வகையில் கோவையில் வெள்ளலூர் பகுதியில் உள்ள தந்தை பெரியார் பகுத்தறிவு படிப்பகத்தின் முன்பு உள்ள பெரியார் சிலைக்கு செருப்பு மாலை அணிவித்து, காவி பொடி தூவி விடப்பட்டுள்ள சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. 
 
இந்நிலையில் இது குறித்து முன்னதாக குஷ்பூ கண்டனம் தெரிவித்த நிலையில் தற்போது மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல்ஹாசனும் கவிஞர் வைரமுத்துவும் கண்டனம் தெரிவித்துள்ளனர். இவர்கள் தங்களது சமூக வலைத்தள பக்கத்தில் குறிப்பிட்டுள்ளதாவது... 
 
வைரமுத்து ட்விட்: 
எதிர்ப்பு வடிவத்தைக் கற்றுக் கொடுத்தவரே பெரியார்தான்.  பெரியாரை அவமதிக்கிறவர்களுக்கும் பெரியார் தான் ஆசான். 'வாழ்க வசவாளர்கள்' என்றார் அண்ணா 'சிறப்புறுக செருப்பாளர்கள்' என்போம் நாம். 
 
கமல் ட்விட்: 
ஒவ்வொரு முறை பெரியார் சிலையை அவமதிக்கும்தோறும் பெரியார் இன்னமும் வீச்சுடனும், வீரியத்துடனும் இன்றைய தலைமுறையிடம் சென்று சேருவார். பெரியாரை ஞாபகப்படுத்த மட்டுமே முடியும். அவமானப்படுத்த முடியாது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

அத்துமீறிய மாமியார் கொடுமை.. ஆள் வைத்து தாக்கிய மருமகள் கைது..!

வீட்டை சுத்தப்படுத்தும் போது கிடைத்த அப்பாவின் வங்கி பாஸ்புக்.. ஒரே நாளில் கோடீஸ்வரர் ஆன இளைஞர்..!

மருத்துவமனையில் குழந்தை கடத்தப்பட்டால் லைசென்ஸ் ரத்து: சுப்ரீம் கோர்ட் எச்சரிக்கை..!

மெரினா செல்லும் பொதுமக்களிடம் கட்டணம் வசூலிக்கப்படுமா? சென்னை மாநகராட்சி விளக்கம்..!

நெல்லையில் மாணவர் அரிவாள் வெட்டு.. ஏப்ரல் 24ல் முக்கிய அறிவிப்பு: அன்பில் மகேஷ்..!

அடுத்த கட்டுரையில்
Show comments