Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

கொரோனா விதிமுறைகளின்படி ஜல்லிக்கட்டு..? – அமைச்சர் தகவல்!

கொரோனா விதிமுறைகளின்படி ஜல்லிக்கட்டு..? – அமைச்சர் தகவல்!
, திங்கள், 10 ஜனவரி 2022 (11:07 IST)
தமிழகத்தில் கொரோனா தீவிரமடைந்துள்ள நிலையில் கட்டுப்பாடுகளுடன் ஜல்லிக்கட்டு நடைபெறும் என அமைச்சர் மூர்த்தி தெரிவித்துள்ளார்.

தமிழகத்தில் கடந்த சில நாட்களில் கொரோனா பாதிப்புகள் வேகமாக அதிகரிக்க தொடங்கியுள்ளன. ஒமிக்ரான் பரவல் தீவிரமடைந்துள்ள நிலையில் பல்வேறு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டு வருகின்றன. இந்நிலையில் பொங்கலை ஒட்டி நடத்தப்படும் பாரம்பரிய போட்டியான ஜல்லிக்கட்டுக்கு அனுமதி அளிக்கப்படுமா என்ற கேள்வி எழுந்துள்ளது.

இன்று முதல்வர் மு.க.ஸ்டாலின் ஊரடங்கில் மேலும் கட்டுப்பாடுகள் விதிப்பது குறித்து மருத்துவ நிபுணர்கள், அதிகாரிகளுடன் ஆலோசனை மேற்கொண்டு வருகிறார். ஜல்லிக்கட்டு அனுமதி குறித்து பேசியுள்ள அமைச்சர் மூர்த்தி “கொரோனா விதிமுறைகளை பின்பற்றி தமிழகத்தில் ஜல்லிக்கட்டு போட்டிகள் நடத்தப்படும். அதற்கான வழிகாட்டு நெறிமுறைகளை முதல்வர் இன்று அறிவிப்பார்” எனக் கூறியுள்ளார்.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

உலகிலேயே நீளமான பெயரைக் கொண்ட குழந்தை இவர்தான்… பெற்றோரின் விபரீத ஆசை!