Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

திமுக, அதிமுக கட்சிகள் கொடுக்கும் பணம் கொள்ளையடித்து சேர்த்தது: வைகோ

திமுக, அதிமுக கட்சிகள் கொடுக்கும் பணம் கொள்ளையடித்து சேர்த்தது: வைகோ
, புதன், 11 மே 2016 (11:37 IST)
தி.மு.க., அ.தி.மு.க. கட்சிகள் கொடுக்கும் பணம் கொள்ளையடித்து சேர்த்தது என்று மதிமுக தலைவரும் மக்கள் நலக்கூட்டணியின் ஒருங்கிணைப்பாளருமான வைகோ கூறியுள்ளார்.


 

கோவை பீளமேடு பகுதியில் தேர்தல் பிரச்சாரம் செய்த அவர் கூறியதாவது:-

இந்த தேர்தலில் தி.மு.க., அ.தி.மு.க. கட்சிகள் கொடுக்கும் பணம் கொள்ளையடித்து சேர்த்த பணம். அந்த பணத்தை நாம் வாங்கினால் பாவம்தான் சேரும். தமிழக மக்களிடம் ஒரு மாற்றம் வேண்டும் என்ற எண்ணத்தில்தான் மக்கள் நலக்கூட்டணியை ஏற்படுத்தினோம். தற்போது விஜயகாந்த் இந்த கூட்டணியின் முதல்வர் வேட்பாளராக உள்ளார். எங்கள் கூட்டணிக்கு நல்ல வரவேற்பு உள்ளது.

அ.தி.மு.க.-தி.மு.க.வுக்கு மாற்றாக எங்கள் கூட்டணி இருப்பதால் தமிழக மக்களிடையே நல்ல வரவேற்பு உள்ளது. எங்கள் கூட்டணி அதிக இடங்களில் வெற்றி பெற்று ஆட்சி அமைக்கும். நம்பியவர்களுக்கு உயிர்கொடுப்பவன்தான் இந்த வைகோ என்று கூறினார்.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

தமிழக தேர்தலில் திரிபுரா முதல்வர் பிரச்சாரம்: எங்கள் மாநிலத்தில் மது, பிச்சைக்காரர்கள் கிடையாது