Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

தமிழக தேர்தலில் திரிபுரா முதல்வர் பிரச்சாரம்: எங்கள் மாநிலத்தில் மது, பிச்சைக்காரர்கள் கிடையாது

தமிழக தேர்தலில் திரிபுரா முதல்வர் பிரச்சாரம்: எங்கள் மாநிலத்தில் மது, பிச்சைக்காரர்கள் கிடையாது
, புதன், 11 மே 2016 (11:34 IST)
தமிழக தேர்தல் பிரச்சாரம் முடிய இன்னும் சில தினங்களே உள்ளன. அனைத்து கட்சிகளும் தீவிர பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகின்றன. தேமுதிக-மக்கள் நல கூட்டணிக்கு ஆதரவாக திரிபுரா முதல்வர் பிரச்சாரம் செய்தார்.


 
 
இந்திய கம்யூனிஸ்ட் கட்சியை சார்ந்த  திரிபுரா முதல்வர் மாணிக் சர்க்கார் தேமுதிக-மக்கள் நல கூட்டணி சார்பில் விக்கிரவாண்டியில் போட்டியிடும் வேட்பாளரை ஆதரித்து பிரச்சாரம் மேற்கொண்டார்.
 
பிரச்சாரத்தில் பேசிய அவர், திரிபுரா முதல்வராக கடந்த 18 வருங்களாக நான் பதவி வகித்து வருகிறேன். அங்கே மது கிடையாது. பிச்சைக்காரர்கள் கிடையாது. ஆரம்ப கல்வி முதல் கல்லூரி வரை இலவசம்.
 
நாங்கள் மத்திய அரசின் நிதி உதவியை எதிர்பார்க்காமல் மக்கள் நலத்திட்டங்களை செயல்படுத்தி வருகிறோம். அதே போல் தமிழகத்தில் உழலற்ற நேர்மையான ஆட்சி அமைய தேமுதிக-மக்கள் நல கூட்டணி-தமக கூட்டணிக்கு ஒரு வாய்ப்பு தாருங்கள் என மாணிக் சர்க்கார் பேசினார்.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

சரத்குமார் மீது வழக்குப்பதிவு - பணம் பறிமுதல் தொடர்பாக நடவடிக்கை