Webdunia - Bharat's app for daily news and videos

Install App

மோடிக்கு திருக்குறள் பரிசளித்த வைகோ – நாடாளுமன்றத்தில் சந்திப்பு !

Webdunia
செவ்வாய், 6 ஆகஸ்ட் 2019 (09:37 IST)
பிரதமர் மோடியை நேற்று சந்தித்த வைகோ தமிழக மக்களின் பிரச்சனைகள் குறித்த மனுக்களை அளித்துள்ளார்.

மாநிலங்களவை உறுப்பினரான வைகோ நேற்று நாடாளுமன்ற வளாகத்தில் பிரதமர் மோடியை சந்தித்தார். இந்த சந்திப்பின் போது தமிழகப் பிரச்சனைகள் குறித்து மனு ஒன்றை அவரிடம் அளித்தார். அந்த மனுவில் ‘ஆயத்த ஆடைகள், பின்னல் ஆடை, நியூட்ரினோ திட்டம், அணை பாதுகாப்பு மசோதா, கூடங்குள அனுக்கழிவு, ஹைட்ரோ கார்பன் திட்டம் ஆகிய முக்கியமான விஷயங்கள் குறித்து தமிழகத்துக்கு சாதகமான முடிவுகளை எடுக்க வேண்டும் ‘ எனக் குறிப்பிட்டுள்ளார்.

மேலும் அணைப் பாதுகாப்பு மசோதாவால் தமிழகம் அடையப் போகும் பாதிப்புக் குறித்து விளக்கமாகக் கூறியுள்ளார். இந்த சந்திப்பின் போது மோடிக்குக் காஞ்சிப் பட்டு சால்வையை அணிவித்து திருக்குறள் புத்தகத்தைப் பரிசாக அளித்தார்.

தொடர்புடைய செய்திகள்

பா.ஜ.கவின் பிளவுவாத கனவு ஒருபோதும் பலிக்காது: முதல்வர் ஸ்டாலின் அறிக்கை

5 நாட்களுக்கு மிக கனமழைக்கு வாய்ப்பு: தயாராகும் தேசிய பேரிடர் மீட்பு படை..!

ராகுல் காந்தியின் ரேபேலி உள்பட 49 தொகுதிகளுக்கு பிரச்சாரம் நிறைவு..மே 20ல் வாக்குப்பதிவு..!

சென்னையில் மெட்ரோ பணிகள்.. இன்று முதல் முக்கிய பகுதியில் போக்குவரத்து மாற்றம்..!

4 மாவட்டங்களில் இன்று மழைக்கு வாய்ப்பு: சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல்

அடுத்த கட்டுரையில்
Show comments