Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

காஷ்மீருக்கு மாநில அந்தஸ்து ....மாநிலங்களவையில் காஷ்மீர் பிரிவினை மசோதா நிறைவேற்றம் ..பாஜக மகிழ்ச்சி

காஷ்மீருக்கு மாநில அந்தஸ்து ....மாநிலங்களவையில் காஷ்மீர் பிரிவினை மசோதா நிறைவேற்றம் ..பாஜக மகிழ்ச்சி
, திங்கள், 5 ஆகஸ்ட் 2019 (18:52 IST)
ஜம்மு காஷ்மீர் மாநிலத்திற்கான சிறப்பு அந்தஸ்த்து அளிக்கின்ற 370 மற்றும் 35 ஏ ஆகியவற்றை ரத்து செய்யும் மசோதாவை, மாநிலங்களவையில் பாஜக அரசு  இன்று பாராளுமன்றத்தில் தாக்கல் செய்தது. இந்நிலையில் காஷ்மீர் இயல்பு நிலைக்கு திரும்பிய பிறகு அதற்கு மாநில அந்தஸ்து அளிக்கப்படும் என்று உள்துறை அமைச்சர் அமித் ஷா கூறியுள்ளார்.
பாஜகவின் தேர்தல் அறிக்கையிலேயே இதுகுறித்த அறிவிப்புகள் இருந்தநிலையில், தற்போது அமர்நாத் யாத்திரை சென்ற பக்தர்கள் மீது, பாக்கிஸ்தான் பயங்கரவாதிகள் அமைப்பு தாக்குதல் நடத்தப்படலாம் என்று  உளவுத்துறை எச்சரிக்கை விடுத்தது. 
 
இந்நிலையில் இன்று பாஜக அரசு இன்று காஷ்மீருக்கு வழங்கப்பட்டு வந்த சிறப்பு அந்தஸ்தை மாநிலங்களவையில் ரத்து செய்தது. திமுக , காங்கிரஸ் உள்ளிட்ட சில கட்சிகள் இதை எதிர்த்தன. ஆனால் அதிமுக தரப்பில் இதற்கு ஆதரவு தெரிவிக்கப்பட்டது. 
 
இந்நிலையில் மத்திய பாஜக அரசின்  இந்த முடிவுக்கு ஆர். எஸ் .எஸ், சிவசேனா, பிஜூ ஜனதாதளம், அதிமுக ,ஒய்.எஸ். ஆர். காங்கிரஸ் , பகுஜன் சமாஜ், ஆம் ஆத்மி ஆகிய கட்சிகள் ஆதவு அளித்துள்ளன.
 
இந்நிலையில் மாநிலங்களவையில், காஷ்மீருக்கு  சிறப்பு அந்தஸ்த்து அளிக்கும்  370 வது பிரிவை நீக்கம்  குறித்து மிகவும் விரிவாக விளக்கம் அளித்தார் அமித் ஷா . 
 
அவர் கூறியுள்ளதாவது : காஷ்மீர் இயல்பு நிலைக்கு திரும்பிய பிறகு அதற்கு மாநில அந்தஸ்து அளிக்கப்படும்  என்று தெரிவித்தார்.
 
காஷ்மீரை பிரித்து யூனியன் பிரதேசமாக உருவாக்குவது ஏன் என உருப்பினர்கள் கேட்டதற்கு, காஷ்மீர் யூனியன் பிரதேச அந்தஸ்து தற்காலிகமானதே என அமித் ஷா தெரிவித்தார். மேலும் 370 வது சட்டப்பிரிவு மூலமே காஷ்மீர் தனது காஷ்மீர் கலாச்சாரத்தை காக்கமுடியும் என கூறுவதை எப்படி ஏற்க முடியும் ? என கேள்வி எழுப்பினார்.
 
இந்நிலையில் தற்பொழுது காஷ்மீர் விவகாரம் குறித்து துணைகுடியரசு தலைவர் மற்றும் மாநிலங்களைவையின் சபாநாயகர் வெங்கைய்யா நாயுடு தலைமையில் வாக்கெடுப்பு நடைபெற்று வருகிறது குறிப்பிடத்தக்கது.

இதில் காஷ்மீர் பிரிப்பு மசோதா நிறைவேற்றபட்டது. இந்த மசோதாவுக்கு ஆதரவாக 125 மசோதாக்களும் ,எதிராக 61 வாக்குகள் பதிவாகின.  காஷ்மீர் இட ஒதுகீட்டு மசோதா மற்றும், ஜம்மு காஷ்மீரை பிரிக்கும் மசோதா,மற்றும்  ஜம்மு காஷ்மீர் மறுசீரமைப்பு மசோதாக்கள் நிறைவேற்றப்பட்டபின்னர் மாநிலங்களவை நாளை வரை ஒத்திவைக்கப்பட்டது. 

இதனையடுத்து மாநிலங்களவையில் நாளை இதுகுறித்த விவாதம் நடைபெறவுள்ளது.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

காஷ்மீரில் இடம் விற்பனைக்கு?? – மெசேஜால் வந்த வினை