Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

காஷ்மீர் சிறப்பு அந்தஸ்து ரத்து என்பது துணிச்சலான முடிவு - பிரதமர் மோடியை பாராட்டிய அத்வானி

காஷ்மீர் சிறப்பு அந்தஸ்து ரத்து என்பது  துணிச்சலான முடிவு - பிரதமர் மோடியை  பாராட்டிய அத்வானி
, திங்கள், 5 ஆகஸ்ட் 2019 (18:14 IST)
காஷ்மீர் மாநிலத்துக்கான் சிறப்பு அந்தஸ்த்தை ரத்து செய்து செய்ததற்க்காக பாரத பிரதமர் மோடியை பாராட்டுவதாக பாஜக மூத்த தலைவர் அத்வானி தெரிவித்துள்ளார்.
ஜம்மு காஷ்மீர் மாநிலத்திற்கான சிறப்பு அந்தஸ்த்து அளிக்கின்ற 370 மற்றும் 35 ஏ ஆகியவற்றை ரத்து செய்யும் மசோதாவை, மாநிலங்களவையில் பாஜக அரசு  இன்று பாராளுமன்றத்தில் தாக்கல் செய்தது.

பாஜகவின் தேர்தல் அறிக்கையிலேயே இதுகுறித்த அறிவிப்புகள் இருந்தநிலையில், தற்போது அமர்நாத் யாத்திரை சென்ற பக்தர்கள் மீது, பாக்கிஸ்தான் பயங்கரவாதிகள் அமைப்பு தாக்குதல் நடத்தப்படலாம் என்று  உளவுத்துறை எச்சரிக்கை விடுத்தது. 
 
இந்நிலையில் இன்று பாஜக அரசு இன்று காஷ்மீருக்கு வழங்கப்பட்டு வந்த சிறப்பு அந்தஸ்தை மாநிலங்களவையில் ரத்து செய்தது. திமுக , காங்கிரஸ் உள்ளிட்ட சில கட்சிகள் இதை எதிர்த்தன. ஆனால் அதிமுக  தரப்பில் இதற்கு ஆதரவு தெரிவிக்கப்பட்டது. 
 
இந்நிலையில் மத்திய பாஜக அரசின்  இந்த முடிவுக்கு ஆர். எஸ் .எஸ், சிவசேனா, பிஜூ ஜனதாதளம், அதிமுக ,ஒய்.எஸ். ஆர். காங்கிரஸ் , பகுஜன் சமாஜ், ஆம் ஆத்மி ஆகிய கட்சிகள் ஆதவு அளித்துள்ளன.
 
மேலும் பிரதமர் மோடியின் வரலாற்றுச் சிறப்பு மிக்க இந்த துணிச்சலான  முடிவை பாராட்டுவதாக முன்னாள் மத்திய அமைச்சர் மற்றும் பாஜக தலைவருமான அத்வானி தெரிவித்துள்ளார்.
webdunia
இதுகுறித்து அவர் கூறியதாவது : டெல்லியில் இன்று செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த அத்வானி: காஷ்மீர் மாநிலத்திற்கான சிறப்பு அந்தஸ்து ரத்து என்பது நாட்டை ஒருமைப்படுத்தும் துணிச்சலான நடவடிக்கை. வரலாற்றுச்சிறப்பு மிக்க இம்முடிவை எடுத்ததற்காக பிரதமர் மோடி மற்றும் அமித் ஷாவை பாராட்டுகிறேன் ‘’ இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

லிப்டில் கயிற்றில் சிக்கிய சிறுவன்: காப்பாற்றிய சிறுமி- வைரல் வீடியோ