Webdunia - Bharat's app for daily news and videos

Install App

எனது சம்பளம் முழுவதும் கட்சிக்கே – வைகோ அறிவிப்பு !

Webdunia
வெள்ளி, 16 ஆகஸ்ட் 2019 (09:14 IST)
வைகோ தனது ராஜ்யசபா எம்.பி. பதவிக்கான சம்பளம் முழுவதையும் கட்சிக்கே அளிப்பதாக அறிவித்துள்ளார்.

மதிமுகவின் வடசென்னை மேற்கு மற்றும் கிழக்கு மாவட்ட செயல்வீரர்கள் கூட்டம் சென்னையில் நேற்று சுதந்திர தினத்தன்று நடைபெற்றது. இந்த கூட்டத்துக்கு வைகோ தலைமை தாங்கினார். அடுத்த மாதம் சென்னையில் நடைபெற உள்ள அண்ணா பிறந்தநாள் மாநாடு குறித்து வைகோ பேசினார்.

அப்போது பேசிய வைகோ ‘ நமது கட்சி ஒன்றும் மிட்டா மிராசுகளின் கட்சி அல்ல. என்னுடைய மாதச் சம்பளத்தைக் அனுப்பும் முகவரியாக கட்சி அலுவலகத்தின் பெயரைதான் நாடாளுமன்றத்தில் எழுதிக் கொடுத்துள்ளேன். அந்த பணத்தை வைத்துக்கொண்டு நிகழ்ச்சிக்கான செலவுகளை செய்யலாம்.’ எனத் தெரிவித்துள்ளார்.

முன்னதாக வைகோவுக்கு சால்வை அணிவிக்க வேண்டாம் என்றும் அவரோடு புகைப்படம் எடுத்துக்கொள்ள 100 ரூபாய் அளிக்க வேண்டும் எனவும் சில நிபந்தனைகள் விதிக்கப்பட்டன. அதன்மூலம் ரூ.1,19,050 நிதியாகக் கிடைத்துள்ளது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

கள்ளச்சாராயத்தை தட்டி கேட்ட கேஸ்.. டெல்லி செல்ல முடியாமல் தவித்த குடும்பம்.. பாஜக செய்த உதவி..!

முதல்முறையாக ஆபரேஷன் சிந்தூர் குறித்து முகேஷ் அம்பானி.. பிரதமர் மோடிக்கு வாழ்த்து..!

9 வயது சிறுமி தற்கொலை: திருச்சியில் ஒரு அதிர்ச்சி சம்பவம்..!

ஓய்வு பெறும் நாளில் 10 வழக்குகளுக்கு தீர்ப்பு.. மரபை மீறினாரா உச்சநீதிமன்ற நீதிபதி..!

அடுத்த கட்டுரையில்
Show comments