Webdunia - Bharat's app for daily news and videos

Install App

சோளக்காட்டில் விமானத்தை இறக்கி 233 பயணிகளை காப்பாற்றிய விமானி!

Webdunia
வெள்ளி, 16 ஆகஸ்ட் 2019 (09:00 IST)
233 பயணிகளுடன் விண்ணில் பறந்து கொண்டிருந்த ஒரு விமானம் திடீரென பறவை மோதியதால் தடுமாறிய நிலையில் அதில் பயணம் செய்த 253 பயணிகளின் உயிர்களை காப்பாற்ற விமானத்தை சோளக்காட்டில் சாதுரியமாக இறக்கிய பாராட்டுக்கள் குவிந்து வருகிறது 
 
சமீபத்தில் ரஷ்ய தலைநகர் மாஸ்கோவில் இருந்து 233 பயணிகளுடன் ஏர் பஸ் 312 என்ற விமானம் கிரீமியா என்ற பகுதிக்கு புறப்பட்டது. விமானம் புறப்பட்ட ஒரு சில நொடிகளில் பறவை கூட்டம் ஒன்று திடீரென விமானத்தின் எஞ்சின் மீது மோதியதால் விமானத்தின் என்ஜின் பகுதியில் லேசான தீ ஏற்பட்டது. இதனால் விமானம் திடீரென ஆட்டம் கண்டது. இந்த நிலையில் சாமர்த்தியமாக செயல்பட்ட இந்த விமானத்தின் விமானி உடனடியாக அருகில் இருந்த சோளக்காடு ஒன்றில் பத்திரமாக தரையிறக்கினார். இதனை அடுத்து அதில் உள்ளவர்கள் உடனடியாக வெளியேற்றப்பட்டனர் 
 
விமானி மட்டும் இதனை கவனிக்காமல் இருந்தால் விமானம் தீப்பிடித்து விமானமே வெடித்திருக்க வாய்ப்புகள் இருந்து. ஆனால் விமானியின் லாவகமான செயல்பாட்டால் அனைத்து பயணிகளின் உயிர் காப்பாற்றப்பட்டது. ஒரு சில பயணிகளுக்கு மட்டும் சிறிய காயங்கள் ஏற்பட்டதாகவும் அவர்களுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருவதாகவும் தெரிகிறது. இக்கட்டான சூழ்நிலையில் விவேகத்துடன் செயல்பட்ட விமானிக்கு ரஷ்ய அரசும், சமூக வலைதளங்களின் பயனாளிகளும் பாராட்டு தெரிவித்து வருகின்றனர்

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

தொடங்கியது பருவமழை; அரபிக்கடலில் உருவாகிறதா புயல்? - வானிலை ஆய்வு மையம் அப்டேட்!

வட மார்க்கெட்களில் ட்ரெண்ட் ஆகும் ‘ஆபரேஷன் சிந்தூர்’ சேலைகள்! - வைரல் வீடியோ!

வார இறுதியிலும் விலை உயர்வு! ரூ.72 ஆயிரத்தை நெருங்கும் தங்கம்! - Gold Price Today!

20 ஆயிரம் இந்தியர்களை கொன்னுருக்காங்க..! பாகிஸ்தான் பேசத் தகுதியே இல்ல! - ஐ.நாவில் வைத்து கிழித்த இந்தியா!

இரவோடு இரவாக சென்னையை வெளுத்த மழை! விமானங்கள் ரத்து! பயணிகள் அவதி!

அடுத்த கட்டுரையில்
Show comments