Webdunia - Bharat's app for daily news and videos

Install App

தமிழகத்தில் தடுப்பூசி கையிருப்பு உள்ளது - அமைச்சர் தகவல்

Webdunia
திங்கள், 28 ஜூன் 2021 (16:27 IST)
இன்று நிகழ்ச்சி ஒன்றில் கலந்துகொண் அமைச்சர் மா. சுப்ரமணியம்,  தமிழக மக்கள் தடுப்பூசி செலுத்த தயாராக இருப்பதாகவும்  கையிருப்பாக 2 லட்சம் தடுப்பூசிகள் உள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.

தமிழகம்  முழுவதும் தடுப்பூசி முகாம்கள் அமைக்கப்பட்டு துரிதமாக தடுப்பூசிகள் போடப்பட்டு வருகின்றன. இந்நிலையில் இன்று ஒரு நிகழ்ச்சியில்  கலந்துகொண்ட மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா சுப்ரமனியம் பேசியதாவது:

‘தமிழ்நாடே தடுப்பூசி போட்டுக்கொள்ள தயாராக உள்ளது. ஆனால் தடுப்பூசிதான் இல்லை. 1.44 கோடி தடுப்பூசிகள் வந்துள்ளன. இதுவரை 1.41 கோடி தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளன. கையிருப்பு 2 லட்சம் தடுப்பூசிகள் உள்ளன. அதுவும் இன்றுக்குள் முடிந்துவிடும்’ எனத் தெரிவித்துள்ளார்.

மேலும்,  தமிழகத்திற்கு வரும் ஜூலை மாதம் 71 லட்சம் தடுப்பூசிகள் தருவதாக மத்திய அரசு கூறியுள்ளதாகவும், கொரோனா இரண்டாவது அலையில் 69,000 படுக்கைகள் தயாராக உள்ளதாகவும், கூதலாக ஆஜ்ஸிஜன் வசதிகள் ஏற்படுத்தப்பட்டுள்ளதாகவும் நம்பிக்கை தெரிவித்துள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

மெட்ரோவில் சூட்கேஸ் கொண்டு சென்ற பயணிக்கு கூடுதல் கட்டணம்.. அதிர்ச்சி தகவல்..!

தெருநாய்களை பிடித்த மாநகராட்சி ஊழியர்கள் மீது தாக்குதல்.. டெல்லியில் பரபரப்பு..!

நிர்மலா சீதாராமனை திடீரென சந்தித்த கனிமொழி.. என்ன காரணம்?

மகாராஷ்டிரா தேர்தலை ரத்து செய்ய தாக்கல் செய்யப்பட்ட மனு: உச்ச நீதிமன்றம் அதிரடி உத்தரவு..!

வெளிமாநிலங்களில் வேலை பார்ப்பவர்கள் திரும்பினால் மாதம் ரூ.5000 உதவித்தொகை: மம்தா பானர்ஜி

அடுத்த கட்டுரையில்
Show comments