Webdunia - Bharat's app for daily news and videos

Install App

மெகா தடுப்பூசி முகாம்கள் இன்றுடன் நிறைவு: அமைச்சர் மா.சுப்பிரமணியன் தகவல்

Webdunia
ஞாயிறு, 25 செப்டம்பர் 2022 (15:51 IST)
தமிழகத்தில் மெகா தடுப்பூசி மையங்கள் நடத்தப்படுவது இன்றுடன் நிறைவு பெறுகிறது என தமிழக சுகாதாரத்துறை அமைச்சர் சுப்பிரமணியன் அவர்கள் தெரிவித்துள்ளார். 
 
கொரோனா வைரஸ் பாதிப்பு காரணமாக கடந்த இரண்டு ஆண்டுகளாக தமிழகத்தில் சென்னை உள்பட பல்வேறு பகுதிகளில் தடுப்பு மையங்கள் நடத்தப்பட்டு வருகின்றன என்பது தெரிந்ததே. 
 
இந்த நிலையில் தமிழகத்தில் மெகா தடுப்பூசி முகாம்கள் இன்றுடன் நிறைவு பெறுவதாக அமைச்சர் சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார். ஆனாலும் அக்டோபர் வரை அரசு மருத்துவமனைகளில் மட்டும் தடுப்பூசி முகாம் நடைபெறும் என்றும் இதுவரை 96 சதவீதத்துக்கும் அதிகமானோர் முதல் தவணைத் தடுப்பூசியும் 91 சதவீதத்திற்கும் அதிகமானோர் இரண்டாவது தவணை தடுப்பூசி செலுத்தி உள்ளதாக தெரிவித்துள்ளார்
 
மேலும் பூஸ்டர் தடுப்பு ஊசி செலுத்தும் பணியும் வரும் 30ஆம் தேதியுடன் நிறைவடைகிறது என்றும் அவர் தெரிவித்துள்ளார்
 
 

தொடர்புடைய செய்திகள்

கை, கால்களில் கட்டப்பட்டிருந்த கம்பி.. ஜெயக்குமார் கொலை வழக்கில் திருப்பம்!

அகிலேஷ் யாதவ் சென்ற கோவிலை கங்கை நீர் கொண்டு சுத்தம் செய்த பாஜகவினர்..! ஷூ அணிந்தபடி வந்ததாக புகார்..!

தடையற்ற மும்முனை மின்சாரமா? முழுப் பூசணிக்காயை சோற்றில் மறைக்கும் அமைச்சர்.! அன்புமணி விமர்சனம்.!!

கடன் வாங்கிய மாணவரின் உறுப்பில் கல்லைக் கட்டி தொங்கவிட்டு கொடூரம்! – உத்தரபிரதேசத்தில் அதிர்ச்சி சம்பவம்!

திடீரென குடும்பத்துடன் வெளிநாட்டுக்கு சென்ற பினராயி விஜயன்.. காங்கிரஸ் கடும் விமர்சனம்..!

அடுத்த கட்டுரையில்
Show comments