Publish Date: Thu, 27 Jan 2022 (13:48 IST)
Updated Date: Thu, 27 Jan 2022 (13:51 IST)
காங்கிரஸ் கட்சியின் பிரபல தலைவர் ஒருவர் அக்கட்சியில் இருந்து விலகி பாஜகவில் இணைந்து உள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
உத்தரகாண்ட் மாநில காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவர் கிஷோர் என்பவர் அந்த கட்சியில் இருந்து திடீரென விலகி பாஜகவில் இணைந்துள்ளார்
ஏற்கனவே அவர் கட்சிக்கு எதிரான செயல்களில் ஈடுபடுவதாக அடிப்படை உறுப்பினர் உட்பட அனைத்து பொறுப்புகளிலிருந்தும் நீக்கியுள்ள நிலையில் தற்போது அவர் காங்கிரஸ் கட்சியில் இருந்து விலகி பாஜகவில் இணைந்துள்ளார்
உத்தரகாண்ட் மாநிலத்தில் பிப்ரவரி 14ஆம் தேதி ஒரே கட்டமாக சட்டமன்றத் தேர்தல் நடைபெற இருக்கும் நிலையில் முன்னாள் காங்கிரஸ் கட்சியின் தலைவர் விலகியுள்ளது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது