Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

தமிழகத்தின் புதிய டிஜிபி யார்? டெல்லியில் யுபிஎஸ்சி ஆலோசனை.. இன்று இறுதி செய்ய வாய்ப்பு..!

Advertiesment
டிஜிபி

Mahendran

, வெள்ளி, 26 செப்டம்பர் 2025 (13:26 IST)
தமிழகத்தின் புதிய சட்டம்-ஒழுங்கு டிஜிபி யார் என்பது குறித்து இன்று இறுதி செய்யப்படும் என்று தகவல் வெளியாகி உள்ளன. 
 
தமிழ்நாடு டிஜிபி தொடர்பாக டெல்லியில் யுபிஎஸ்சி ஆலோசனை செய்து வருவதாகவும், இந்த ஆலோசனையின் போது தமிழ்நாடு அரசு சார்பில் தலைமை செயலாளர் என். முருகானந்தன், உள்துறைச் செயலாளர் ராஜ்குமார் ஆகியோர் பங்கேற்று இருப்பதாகவும் தகவல்கள் வெளியாகி உள்ளன.
 
தமிழ்நாட்டில் புதிய டிஜிபி பதவிக்கு தகுதியான மூன்று பேரை யுபிஎஸ்சி இன்று இறுதி செய்ய வாய்ப்பு உள்ளதாகவும், இறுதி செய்யப்படும் மூன்று பேரில் ஒருவரை தமிழ்நாடு டிஜிபி-யாக தமிழ்நாடு அரசு நியமிக்கும் என்றும் தகவல்கள் வெளியாகி உள்ளன.
 
தமிழ்நாட்டின் டிஜிபி சங்கர் ஜிவால் கடந்த 30ம் தேதியோடு ஓய்வு பெற்ற நிலையில் தற்போது இடைக்கால டிஜிபி மட்டுமே பதவியில் இருப்பதால், புதிய டிஜிபி இன்று இறுதி செய்யப்பட்டு விரைவில் முடிவு அறிவிக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
 
Edited by Mahendran

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

பெண்ணை தூக்கி தீ மிதிக்க சென்ற முதியவர்.. இருவரும் விழுந்து படுகாயம்.. அதிர்ச்சி தகவல்..!