Webdunia - Bharat's app for daily news and videos

Install App

நாளை அமாவாசை.. இன்று திருச்செந்தூரில் திடீரென உள்வாங்கிய கடல்..!

Siva
புதன், 30 அக்டோபர் 2024 (14:30 IST)
ஒவ்வொரு மாதமும் அமாவாசை, பௌர்ணமி மற்றும் அதன் முந்தைய நாட்களில் திருச்செந்தூரில் கடல் உள்வாங்கி வரும் நிலையில், நாளை அமாவாசை என்ற நிலையில், இன்று திடீரென திருச்செந்தூரில் கடல் உள்வாங்கி இருப்பது அந்த பகுதி மக்கள் மத்தியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. 
 
நாளை மாலை அமாவாசை தொடங்கும் நிலையில், சற்றுமுன் திருச்செந்தூர் கடல் பகுதியில் 50 அடி வரை உள்வாங்கி காணப்பட்டதாக செய்தி வெளியாகியுள்ளது. நேற்று ஏற்கனவே கடல் உள்வாங்கிய நிலையில், இன்று இரண்டாவது நாளாகவும் 50 அடி உள்வாங்கி இருப்பதாகவும், இதனால் பாசிகள் படிந்த பாறைகள் வெளியே தெரிவதாகவும் கூறப்படுகிறது.
 
 இதனை சுற்றுலா பயணிகள் மற்றும் உள்ளூர் மக்கள் ஆச்சரியத்துடன் பார்த்து வருகின்றனர். இருப்பினும், திருச்செந்தூர் கோவிலுக்கு வரும் பக்தர்கள் அச்சமின்றி கடலில் புனித நீராடி வருவதாகவும், கோவில் அருகே உள்ள கடற்கரையில் எந்தவித பிரச்சனையும் இல்லை என்றும் கூறப்பட்டு வருகிறது.
 
 
 
Edited by Siva

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

கோழியா? முட்டையா? எது முதலில் வந்தது? - புதிருக்கு விடை கண்டுபிடித்த விஞ்ஞானிகள்!

யூட்யூபை பார்த்து தன் வயிற்றை தானே கிழித்து ஆபரேஷன் செய்த நபர்! - அதிர்ச்சி சம்பவம்!

நாளை தொகுதி மறுசீரமைப்பு கூட்டம்! இன்றே சென்னை வந்த கேரள முதல்வர் பினராயி விஜயன்! - பரபரப்பாகும் அரசியல் களம்!

சோதனை ஓட்டம் வெற்றி! டிசம்பரில் வருகிறது புதிய மெட்ரோ ரயில் சேவை! - சென்னை மக்களுக்கு ஹேப்பி நியூஸ்!

அன்றைக்கு மட்டும் ஐபிஎல் போட்டி நடத்தாதீங்க! - ஐபிஎல் நிர்வாகத்திற்கு காவல்துறை வேண்டுகோள்!

அடுத்த கட்டுரையில்
Show comments