Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

சலூன் கடை திறந்த உடுமலை கெளசல்யா: திறந்து வைத்த பிரபல நடிகை

udumalai kousalya
, ஞாயிறு, 25 செப்டம்பர் 2022 (18:16 IST)
சலூன் கடை திறந்த உடுமலை கெளசல்யா: திறந்து வைத்த பிரபல நடிகை
உடுமலை சங்கர் - கெளசல்யா என்றால் தெரியாதவர்கள் யாரும் இருக்க முடியாது என்றும் சங்கர் படுகொலை செய்யப்பட்டார் என்பதும் இந்த வழக்கில் கௌசல்யாவின் தந்தை உள்பட 6 பேருக்கு தூக்கு தண்டனை கிடைத்தது என்பது தெரிந்ததே 
 
இந்த நிலையில் கடந்த 2018 ஆம் ஆண்டு மறுமணம் செய்துகொண்ட கவுசல்யாவுக்கு மத்திய அரசு வேலை கிடைத்த போதிலும் அந்த வேலையை விட்டு விலகினார். இதனை அடுத்து தற்போது அவர் கோவை வெள்ளலூர் என்ற பகுதியில் சலூன் தொடங்கியுள்ளதாகவும் இந்த சலூன் கடையை பிரபல நடிகை பார்வதி திறந்து வைத்ததாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன 
 
இந்த கடை திறப்பு விழாவுக்கு சத்யராஜ் உள்பட பலர் தங்களது வாழ்த்துக்களை தெரிவித்து உள்ளனர் என்பதும் இந்த விழாவில் பிரபல பத்திரிக்கையாளர் தன்யா ராஜேந்திரன் கலந்துகொண்டு உடுமலை கௌசல்யாவுக்கு வாழ்த்துக்களை தெரிவித்து உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது
 
 

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

ஆன்லைன் ரம்மியில் ரூ.20 லட்சம் நஷ்டம்: ஒரே குடும்பத்தை சேர்ந்த 3 பேர் தற்கொலை முயற்சி!