Webdunia - Bharat's app for daily news and videos

Install App

கலைஞர் மீது பற்றுக்கொண்ட முத்து! – நா.மு குறித்து உதயநிதி ட்வீட்!

Webdunia
ஞாயிறு, 12 ஜூலை 2020 (15:21 IST)
கவிஞர் நா.முத்துக்குமாரின் பிறந்தநாளை இன்று பலர் கொண்டாடி வரும் நிலையில் நா.முத்துக்குமாருடனான தனது அனுபவங்களை உதயநிதி பகிர்ந்துள்ளார்.

திரையிசையில் இன்று இளைஞர்களின் மிகப்பெரும் ஆதர்சமாக இருப்பவர் கவிஞர் நா.முத்துக்குமார். சில ஆண்டுகள் முன்பு அவர் உடல்நல குறைவால் இளம் வயதிலேயே இறந்துவிட்ட நிலையிலும், அவரது பாடல் வரிகள் இன்றும் அனைவரிடமும் உயிர்ப்புடன் உள்ளன. நா.முத்துக்குமாரின் பிறந்தநாளை அவரது கவிதைகளுடன் பலர் கொண்டாடி வரும் நிலையில் அவர் குறித்து உதயநிதி ஸ்டாலினும் பதிவிட்டுள்ளார்.

இதுகுறித்து ட்விட்டரில் பதிவிட்டுள்ள அவர் “இலக்கியத்தை ஜனரஞ்சகமாக்கி பட்டிதொட்டிகளை தொட்ட கவிஞர் நா.முத்துக்குமாரின் பிறந்தநாள் இன்று. என் முதல் படமான OKOK-வில் அனைத்து பாடல்களையும் எழுதி படம் வெளியாவதற்கு முன்பே என்னை மக்களிடம் கொண்டுசேர்த்தவர். கழகம் மீதும், கலைஞர் மீதும் பற்று கொண்ட முத்து சட்டென மறைந்தது பெருஞ்சோகம்!” என   நா.முத்துக்குமாருடனான தனது நினைவுகளை பகிர்ந்து கொண்டுள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

கை, கால்களில் கட்டப்பட்டிருந்த கம்பி.. ஜெயக்குமார் கொலை வழக்கில் திருப்பம்!

அகிலேஷ் யாதவ் சென்ற கோவிலை கங்கை நீர் கொண்டு சுத்தம் செய்த பாஜகவினர்..! ஷூ அணிந்தபடி வந்ததாக புகார்..!

தடையற்ற மும்முனை மின்சாரமா? முழுப் பூசணிக்காயை சோற்றில் மறைக்கும் அமைச்சர்.! அன்புமணி விமர்சனம்.!!

கடன் வாங்கிய மாணவரின் உறுப்பில் கல்லைக் கட்டி தொங்கவிட்டு கொடூரம்! – உத்தரபிரதேசத்தில் அதிர்ச்சி சம்பவம்!

திடீரென குடும்பத்துடன் வெளிநாட்டுக்கு சென்ற பினராயி விஜயன்.. காங்கிரஸ் கடும் விமர்சனம்..!

அடுத்த கட்டுரையில்
Show comments