Webdunia - Bharat's app for daily news and videos

Install App

நம்ம பிள்ளைங்க படிக்க கூடாதுன்னு பண்றாங்க! – உதயநிதி ஸ்டாலின்

Webdunia
வியாழன், 24 செப்டம்பர் 2020 (12:48 IST)
மத்திய அரசின் புதிய கல்வி கொள்கை குறித்து பேசியுள்ள உதயநிதி ஸ்டாலின் மாணவர்கள் படித்துவிட கூடாது என்பதற்காகவே இந்த கொள்கை கொண்டு வரப்பட்டுள்ளதாக கூறியுள்ளார்.

மத்திய அரசின் புதிய கல்வி கொள்கையையும், முக்கியமாக அதில் மூன்றாவது மொழியாக இந்தி கொண்டு வரப்படுவதையும் திமுக உள்ளிட்ட தமிழக எதிர்க்கட்சிகள் பலமாக எதிர்த்து வருகின்றன. ஆனால் மாணவர்கள் மூன்றாவது மொழி கற்றுக் கொள்வது அவசியம் என பாஜக தரப்பிலும் பலர் பேசி வருகின்றனர்.

இதுகுறித்து பேசியுள்ள திமுக இளைஞரணி செயலாளர் உதயநிதி ஸ்டாலின் “முன்பெல்லாம் சமஸ்கிருதம் தெரிந்திருந்தால்தான் மருத்துவம் படிக்க முடியும் என சொல்வார்கள். இன்று எத்தனை மருத்துவர்கள் சமஸ்கிருதம் பேசுகிறார்கள்?” என கேள்வி எழுப்பியுள்ளார். மேலும் மூன்றாவது மொழி அவசியமற்ற ஒன்று எனவும், நம் வீட்டுப்பிள்ளைகல் படித்து விட கூடாது என்பதற்காகவே புதிய கல்விக்கொள்கையை கொண்டு வந்துள்ளனர் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

கோவிஷீல்டு தடுப்பூசியால் பாதிப்பு? உச்ச நீதிமன்றத்தில் பொதுநல மனு தாக்கல்

சன் டிவியில் ராமாயணம் தொடர்.. எதிர்ப்பு தெரிவிக்கும் திருமுருகன் காந்தி..!

ஏற்காடு விபத்தில் பலியானோரின் குடும்பத்திற்கு முதல்வர் இரங்கல்..! நிவாரணம் வழங்கப்படும் என அறிவிப்பு..!

தமிழகத்தில் 3 நாட்களுக்கு வெயில் கொளுத்தும்.! வானிலை மையம் வார்னிங்..!!

வறட்சியால் பாதித்த விவசாயிகளுக்கு நிவாரணம் வழங்காதது ஏன்.? தமிழக அரசுக்கு அன்புமணி கண்டனம்..!

அடுத்த கட்டுரையில்
Show comments