Webdunia - Bharat's app for daily news and videos

Install App

நோட்டா ஜி இன்னும் பச்ச கொடி காட்டலையா? ஈபிஎஸ்-ஐ கலாய்ந்த உதயநிதி!

Webdunia
வெள்ளி, 24 ஜூலை 2020 (13:40 IST)
எம்.ஜி.ஆர் சிலை அவமதிப்பு குறித்து தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமிக்கு எவ்வித கருத்தும் இல்லையா என உதயநிதி கேள்வி எழுப்பியுள்ளார். 
 
அண்ணா திராவிட முன்னேற்ற கழகத்தின் நிறுவனரும், முன்னாள் முதல்வருமான எம்.ஜி.ஆருக்கு தமிழகம் முழுவதும் பல பகுதிகளில் சிலைகள் உள்ளன. இந்நிலையில் புதுச்சேரியில் உள்ள அவரது சிலைக்கு சிலர் காவித்துண்டு அணிவித்தது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.  
 
இதனிடையே எம்ஜிஆர் சிலைக்கு காவித்துண்டு அணிவிக்கப்பட்டதற்கு தமிழக துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் கடும் கண்டனங்களை தெரிவித்துள்ளார். ஆனால் இது குறித்து இன்னும் வாய்திறக்காமல் உள்ளார் தமிழக முதலவர் எடப்பாடி பழனிச்சாமி. 
 
எனவே இதனை விமர்சித்து உதயநிதி ஸ்டாலின் தனது டிவிட்டர் பக்கத்தில் சிலை அவமதிப்பு குறித்து தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமிக்கு எவ்வித கருத்தும் இல்லையா அல்லது பதிலளிக்க நோட்டாஜியிடமிருந்து க்ரீன் சிக்னல் கிடைக்கவில்லையா? அம்மா மரண மர்மத்தையே மறந்துட்டோம். இதெல்லாம் எதற்கு?  என நினைத்திருக்கலாம்? தற்போது இவருக்கு நிறுவனரைவிட உள்வாடகைக்கு எடுத்திருப்பவரே முக்கியம் என பதிவிட்டுள்ளார். 

தொடர்புடைய செய்திகள்

நடுவானில் இயந்திரக்கோளாறு..! அவசரமாக தரையிறக்கப்பட்ட விமானம்..!!

இன்று மாலை 31 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு: சென்னை வானிலை ஆய்வு மையம்

அரசியலமைப்பை யாராலும் மாற்ற முடியாது..! காங்கிரஸுக்கு அமைச்சர் நிதின் கட்கரி பதிலடி..!!

வங்கக்கடலில் உருவாகிறது காற்றழுத்த தாழ்வு பகுதி.! தமிழகத்தில் 3 நாட்களுக்கு ரெட் அலர்ட்..!!

100 நாள் திட்ட பணியாளர்களுக்கு ஊதியம் உயர்வு..! அரசாணை வெளியிட்ட தமிழக அரசு...!!

அடுத்த கட்டுரையில்
Show comments