Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

Corona-க்கு கணக்கு தெரியாது: ஈபிஎஸ்-க்கு நொண்டி சாக்கு கற்று கொடுக்கும் உதயநிதி!

Corona-க்கு கணக்கு தெரியாது: ஈபிஎஸ்-க்கு நொண்டி சாக்கு கற்று கொடுக்கும் உதயநிதி!
, சனி, 25 ஜூலை 2020 (15:47 IST)
10-த்தே நாளில் கொரோனா குறையும் என கூறிய முதல்வரை விமர்சித்து திமுக இளைஞர் அணி செயலாளர் உதயநிதி ஸ்டாலின் தனது டிவிட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். 
 
நேற்று தமிழகத்தில் 6,785 பேருக்கு புதிதாக கொரோனா தொற்று பரவி இருப்பதால் தமிழகத்தில் கொரோனா பாதிப்பு உள்ளவர்களின் மொத்த எண்ணிக்கை 199,749 ஆக உயர்ந்துள்ளது. மேலும் கொரோனாவால் பாதிப்பு அடைந்த 6,785 பேர்களில் 1,299 பேர் சென்னையை சேர்ந்தவர்கள் என்பதால் சென்னையில் கொரோனா பாதிப்பு அடைந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 92,206 ஆக உயர்ந்துள்ளது என்பதும் குறிப்பிடத்தக்கது.  
 
மேலும் தமிழகத்தில் நேற்று கொரோனாவுக்கு 88 பேர் பலியாகியுள்ளதை அடுத்து தமிழகத்தில் பலி எண்ணிக்கை 3,320 ஆக உயர்ந்துள்ளது.  அதோடு தமிழகத்தில் 6,504 பேர் கொரோனாவில் இருந்து குணமாகியுள்ளனர். இந்நிலையில் கடந்த 2 நாட்களாக என்றும் இல்லாத வகையில் கொரோனா 6,000 -  7,000 என பாதிப்பு எண்ணிக்கை உயர்ந்தது அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது. 
 
இந்நிலையில், பத்தேநாளில் கொரோனா குறையும் என தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி கிளப்பிவிட்டு இன்றோடு 10 நாட்களாகி விட்டன. ஏற்கனவே, 3 நாட்களில் கொரோனா ஜீரோ வரும் என்றார். பாதிப்பு எண்ணிக்கையில் ஜீரோக்கள் கூடியதே மிச்சம். கொரோனாவுக்கு ஒன்றிரண்டு தெரியாததற்கு நான் என்ன செய்யமுடியும் என்று ஒருநாள் சொன்னாலும் சொல்வார் என உதயநிதி தனது டிவிட்டர் பக்கத்தில் நக்கலடித்துள்ளார். 

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

மறைந்த ஜெ.அன்பழகன் மகனுக்கு முக்கிய பொறுப்பு வழங்கிய உதயநிதி!