Webdunia - Bharat's app for daily news and videos

Install App

தமிழகத்தில் மோடிக்கு இரண்டு அடிமைகள்: உதயநிதி ஸ்டாலின்

Webdunia
புதன், 31 ஜூலை 2019 (15:25 IST)
தமிழகத்தில் மோடிக்கு இரண்டு அடிமைகள் இருப்பதகவும் அவர்கள் ஓ.பி.எஸ், ஈ.பி.எஸ் என யாரைக்கேட்டாலும் சொல்வார்கள் என்றும் வேலூரில் தேர்தல் பிரச்சாரம் செய்த உதயநிதி ஸ்டாலின் தெரிவித்தார்.
 
 
வேலூர் தேர்தல் பிரச்சாரத்தின்போது அவர் மேலும் பேசியதாவது: நாடாளுமன்ற பொதுத் தேர்தலில் ஒட்டுமொத்தமாக தி.மு.க கூட்டணிக்குத் தமிழக மக்கள் வாக்களித்து வெற்றிபெறச் செய்தனர். தமிழக மக்கள் மோடிக்கும், ஈ.பி.எஸ்., ஓ.பி.எஸ் உள்பட எதிர்த்தரப்பினர் அனைவருக்கும் சரியான பதிலடி கொடுத்தனர். இதேபோல் மீண்டும் பதிலடி கொடுக்க உங்களுக்கு இன்னொரு வாய்ப்பும் கிடைத்திருக்கிறது.
 
 
நான் இளைஞரணிச் செயலாளராக பொறுப்பேற்ற பிறகு முதன் முறையாக வேலூர் தொகுதி வேட்பாளர் கதிர் ஆனந்துக்கு ஓட்டு கேட்க வந்திருக்கிறேன். டி.எம்.கே என்றால் தி.மு.க என்பது மட்டும் பொருளல்ல, டி.எம்.கதிர் ஆனந்த் என்பதையும் குறிக்கும். 
 
 
கடந்த ஏப்ரல் 18-ம் தேதி தேர்தல் நடந்திருந்தால் கதிர் ஆனந்த் பல லட்சம் ஓட்டு வித்தியாசத்தில் வெற்றி பெற்றிருப்பார். வரும் 5-ம் தேதி நீங்கள் ஓட்டு போடுங்கள். ஆகஸ்ட் 7-ம் தேதி கருணாநிதி நம்மை விட்டுப் பிரிந்து சென்ற தினம். வேலூர் வெற்றியை அவருக்குக் காணிக்கையாக செலுத்துவோம்’’ என்று பேசினார்.
 
முன்னதாக தேர்தல் பிரச்சாரத்திற்கு சென்றபோது திமுக தலைவர் ஸ்டாலின் பாணியில் கூலித் தொழிலாளர்களுடன் சகஜமாக பழகுவதுடன், அவர்களுடன் சேர்ந்து வேலை செய்வது, செல்ஃபி எடுத்துக்கொள்வது என உதயநிதி அசத்தினார். அவரது புதிய பாணியை வேலூர் தொகுதி மக்கள் மிகவும் ரசித்தனர் என்பது குறிப்பிடத்தக்க்கது

தொடர்புடைய செய்திகள்

கை, கால்களில் கட்டப்பட்டிருந்த கம்பி.. ஜெயக்குமார் கொலை வழக்கில் திருப்பம்!

அகிலேஷ் யாதவ் சென்ற கோவிலை கங்கை நீர் கொண்டு சுத்தம் செய்த பாஜகவினர்..! ஷூ அணிந்தபடி வந்ததாக புகார்..!

தடையற்ற மும்முனை மின்சாரமா? முழுப் பூசணிக்காயை சோற்றில் மறைக்கும் அமைச்சர்.! அன்புமணி விமர்சனம்.!!

கடன் வாங்கிய மாணவரின் உறுப்பில் கல்லைக் கட்டி தொங்கவிட்டு கொடூரம்! – உத்தரபிரதேசத்தில் அதிர்ச்சி சம்பவம்!

திடீரென குடும்பத்துடன் வெளிநாட்டுக்கு சென்ற பினராயி விஜயன்.. காங்கிரஸ் கடும் விமர்சனம்..!

அடுத்த கட்டுரையில்
Show comments