ஓபிஎஸ் இடத்தை பிடித்த உதயக்குமார்! – இனி துணை எதிர்கட்சி தலைவர்!

Webdunia
செவ்வாய், 19 ஜூலை 2022 (12:14 IST)
தமிழ்நாடு சட்டமன்றத்தில் எதிர்கட்சியாக உள்ள அதிமுகவின் துணை எதிர்கட்சி தலைவராக ஆர்.பி.உதயகுமார் தேர்வு செய்யப்பட்டுள்ளார்.

தமிழ்நாட்டின் மிகப்பெரும் மாநில கட்சியான அதிமுகவில் முக்கிய தலைவர்களான எடப்பாடி பழனிசாமி – ஓ பன்னீர்செல்வம் இடையே கட்சி ஒற்றைத் தலைமை குறித்த மோதல் எழுந்தது. சமீபத்தில் நடைபெற்ற அதிமுக பொதுக்குழு கூட்டத்தில் எடப்பாடி பழனிசாமி இடைக்கால பொதுசெயலாளராக தேர்ந்தெடுக்கப்பட்டார்.

அதை தொடர்ந்து கட்சி விரோத நடவடிக்கைகளில் ஈடுபட்டதாக ஓ.பன்னீர்செல்வம் மற்றும் அவரது ஆதரவாளர்களை கட்சி அடிப்படை உறுப்பினர் உள்ளிட்ட அனைத்து பொறுப்புகளில் இருந்தும் நீக்குவதாக எடப்பாடி பழனிசாமி அறிவித்தார்.

இதனால் ஓ.பன்னீர்செல்வம் வகித்த கட்சி பொருளாளர், எதிர்கட்சி துணைத்தலைவர் உள்ளிட்ட பதவிகள் காலியானதாக அறிவிக்கப்பட்டது. அதை தொடர்ந்து நேற்று நடந்த அதிமுக எம்.எல்.ஏக்கள் கூட்டத்தில் ஆர்.பி.உதயகுமார் கட்சியின் துணை எதிர்கட்சி தலைவராக அறிவிக்கப்பட்டுள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

முயல்வேட்டையில் ஈடுபட்ட 2 சிறுவர்கள் பரிதாப பலி.. திருவண்ணாமலையில் சோகம்..!

சபரிமலைக்கு மாலை போட்ட மாணவர் கருப்பு உடை அணிய தடை.. பள்ளி நிர்வாகத்திற்கு எதிர்ப்பு..!

வாக்கு எண்ணிக்கையில் முறைகேடு நடந்தால் நேபாளம் போல் புரட்சி வெடிக்கும்: ஆர்ஜேடி எச்சரிக்கை

மேகதாது அணை சர்ச்சை: உச்ச நீதிமன்ற அனுமதி குறித்த தகவல் தவறு! அமைச்சர் துரைமுருகன் விளக்கம்

மேகதாதுவில் அணை கட்ட சுப்ரீம் கோர்ட் அனுமதியா? தமிழக அரசுக்கு ஈபிஎஸ் கண்டனம்..!

அடுத்த கட்டுரையில்
Show comments