Webdunia - Bharat's app for daily news and videos

Install App

சுர்ஜித் இறந்த சோகம் மறைவதற்குள் அடுத்த சோகம்! – 2 வயது குழந்தை பலி!

Webdunia
செவ்வாய், 29 அக்டோபர் 2019 (11:05 IST)
ஆழ்துளை கிணற்றில் விழுந்த குழந்தை சுர்ஜித் இறந்த சம்பவம் தமிழ்நாட்டையே கலங்க வைத்திருக்கும் அதேசமயம் மற்றொரு குழந்தை பரிதாபமாக உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

தூத்துக்குடி திரேஸ்புரத்தை சேர்ந்த மீனவர் லிங்கேஸ்வரன். இவருக்கு ரேவதி சஞ்சனா என்ற இரண்டு வயது குழந்தை உள்ளது. நேற்று லிங்கேஸ்வரனும், அவரது மனைவி நிஷாவும் ஆழ்துளை கிணற்றில் தவறி விழுந்த சுர்ஜித்தை மீட்க நடந்த முயற்சிகளை டிவியில் பார்த்துக் கொண்டிருந்திருக்கிறார்கள்.

அப்போது தங்களது மகள் ரேவதியை காணாமல் திடுக்கிட்ட அவர்கள் எல்லா பக்கமும் தேடியிருக்கிறார்கள். அப்போது பாத்ரூமில் தண்ணி பக்கெட்டில் குழந்தை ரேவதி தவறி விழுந்து மூச்சு விட முடியாமல் இறந்து கிடப்பதை கண்டு கதறி அழுதுள்ளனர். உடனடியாக குழந்தையை தூக்கி கொண்டு மருத்துவமனை சென்றிருக்கிறார்கள். ஆனால் குழந்தை ஏற்கனவே இறந்துவிட்டதாக டாக்டர்கள் தெரிவித்துள்ளனர்.

சுர்ஜித் இறந்த சோகம் மறைவதற்குள் மற்றொரு குழந்தையும் இறந்துள்ள சம்பவம் பலருக்கு மேலும் வேதனையை அளித்துள்ளது.

தொடர்புடைய செய்திகள்

கோவிஷீல்டு தடுப்பூசியால் பாதிப்பு? உச்ச நீதிமன்றத்தில் பொதுநல மனு தாக்கல்

சன் டிவியில் ராமாயணம் தொடர்.. எதிர்ப்பு தெரிவிக்கும் திருமுருகன் காந்தி..!

ஏற்காடு விபத்தில் பலியானோரின் குடும்பத்திற்கு முதல்வர் இரங்கல்..! நிவாரணம் வழங்கப்படும் என அறிவிப்பு..!

தமிழகத்தில் 3 நாட்களுக்கு வெயில் கொளுத்தும்.! வானிலை மையம் வார்னிங்..!!

வறட்சியால் பாதித்த விவசாயிகளுக்கு நிவாரணம் வழங்காதது ஏன்.? தமிழக அரசுக்கு அன்புமணி கண்டனம்..!

அடுத்த கட்டுரையில்
Show comments