Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

பருப்பு கம்பெனியில் 10 வருடம் வேலை பார்த்த பெண் ஊழியர்கள்: ரூ.2.5 கோடி சுருட்டியதாக புகார்..!

பருப்பு கம்பெனியில் 10 வருடம் வேலை பார்த்த பெண் ஊழியர்கள்: ரூ.2.5 கோடி சுருட்டியதாக புகார்..!
, வியாழன், 20 ஜூலை 2023 (08:48 IST)
சென்னையில் உள்ள தனியார் பருப்பு கம்பெனியில் 10 வருடம் வேலை பார்த்த இரண்டு பெண்கள் ரூபாய் கோடி சுருட்டி உள்ளதாக கண்டுபிடிக்கப்பட்டுள்ளது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. 
 
சென்னை திருவொற்றியூர் பகுதியில் உள்ள பருப்பு கம்பெனியில் கடந்த 10 ஆண்டுகளாக கணக்கு பார்க்கும் வேலையில் சில பெண் ஊழியர்கள் செய்து வந்தனர். 
இவர்களில் சரண்யா மற்றும் பிரதீபா ஆகிய இருவர் கடந்த ஆண்டுகளில் ரூ.2.50 கோடி ரூபாய் சுருட்டியதாக புகார் அளிக்கப்பட்டது. இதனை அடுத்து இருவரும் கைது செய்யப்பட்டுள்ளனர்
 
 இந்த மோசடி விவகாரத்தில் திவ்யா என்ற பெண்ணும் சம்பந்தப்பட்டிருப்பதாக கூறப்பட்டாலும் அவர் நிறைமாத கர்ப்பிணியாக இருப்பதால் கைது செய்யப்படவில்லை என்று கூறப்படுகிறது. 
 
இந்த நிலையில் மூன்று பேரின் வீடுகளில் நடந்த சோதனைகளில் ரூ.27 லட்சம் ரொக்கம், 197 பவுன் நகைகள், ரூபாய் 67 லட்சம் வங்கி வைப்புத் தொகை, கார் பைக் மற்றும் மொபைல்கள் பறிமுதல் செய்யப்பட்டதாக காவல் துறையினர் தெரிவித்துள்ளனர்
 
Edited by Siva

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

காவிரி நீர் பங்கீடு விவகாரம்: மத்திய அமைச்சரை இன்று சந்திக்கிறார் துரைமுருகன்..!