Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

காவிரி நீர் பங்கீடு விவகாரம்: மத்திய அமைச்சரை இன்று சந்திக்கிறார் துரைமுருகன்..!

duraimurugan
, வியாழன், 20 ஜூலை 2023 (08:43 IST)
மத்திய நீர்வளத் துறை அமைச்சர்  கஜேந்திர சிங் ஷெகாவத் அவர்களை இன்று அமைச்சர் துரைமுருகன் சந்திக்கிறார். இன்றைய சந்திப்பின்போது அவர் காவிரி நீர் பங்கீடு விவகாரம் தொடர்பாக சில முக்கிய கோரிக்கைகளை முன்வைக்க உள்ளார் என்று தகவல் வெளியாகியுள்ளது.
 
கடந்த 2 வாரங்களுக்கு முன்பு மத்திய அமைச்சர் கஜேந்திரசிங்கை நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகன் சந்தித்தபோது காவிரியில் இருந்து தமிழகத்துக்கு வழங்க வேண்டிய தண்ணீரை உடனடியாக விடுவிக்க வலியுறுத்தினார். இந்த நிலையில் இன்று மீண்டும் அமைச்சர் துரைமுருகன் மத்திய நீர்வளத் துறை அமைச்சர்  கஜேந்திர சிங் ஷெகாவத்தை சந்திக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.
 
மேலும் இன்றைய சந்திப்பின்போது மேகதாதுவில் அணை கட்ட கர்நாடகா அரசுக்கு அனுமதி வழங்க கூடாது என மத்திய அமைச்சரிடம் அமைச்சர் துரைமுருகன் கேட்டுக்கொள்வார் என எதிர்பார்க்கப்படுகிறது.
 
Edited by Siva

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

ஹிஜாப் அணியாத 61 வயது நடிகைக்கு 2 வருட சிறைத்தண்டனை..! அதிர்ச்சி தகவல்..!