Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

எல்.கே.ஜி படிக்கும் சிறுமிக்கு பாலியல் தொல்லை.. 2 ஆசிரியர்கள் போக்சோ சட்டத்தில் கைது..!

எல்.கே.ஜி படிக்கும் சிறுமிக்கு பாலியல் தொல்லை.. 2 ஆசிரியர்கள் போக்சோ சட்டத்தில் கைது..!

Siva

, வியாழன், 7 மார்ச் 2024 (11:18 IST)
எல்கேஜி படிக்கும் சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்த இரண்டு ஆசிரியர்கள் கைது செய்யப்பட்டு அவர்கள் மீது போக்சோ சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது செங்கல்பட்டு வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

செங்கல்பட்டு மாவட்டம் வல்லஞ்சேரி அருகே உள்ள தனியார் பள்ளியில் எல்கேஜி படிக்கும் சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாக ராசையா என்ற 31 வயது ஆசிரியர் மற்றும் காயேஷ்குமார் என்ற 40 வயது ஆசிரியர் ஆகிய இருவரும் கைது செய்யப்பட்டுள்ளனர்.

இவர்கள் இருவர் மீதும் போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர். எல்கேஜி படிக்கும் சிறுமிக்கு விளையாட்டு சொல்லி தருவதாக கூறி இருட்டு அறைக்கு அழைத்துச் சென்று பாலியல் தொல்லை கொடுத்தது விசாரணையில் அம்பலமாகியுள்ளது.

இந்த விவகாரத்தில் பள்ளி நிர்வாகம் நடவடிக்கை எடுக்காததை கண்டித்து பெற்றோர்கள் நேற்று முன்தினம் போராட்டம் நடத்தியதை அடுத்து காவல்துறையினர் சுதாரித்து இரண்டு ஆசிரியர்களையும் கைது செய்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

Edited by Siva
 

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

கயிறு போட்டு ஏறி பிட்டு விநியோகம்.. என்னா ஒரு புத்திசாலித்தனம்! - பள்ளித் தேர்வில் பரபரப்பு!