Webdunia - Bharat's app for daily news and videos

Install App

பிரியா மரண வழக்கில் 2 மருத்துவர்கள் முன்ஜாமீன் மனு தாக்கல்

Webdunia
வெள்ளி, 18 நவம்பர் 2022 (11:42 IST)
கால்பந்தாட்ட வீராங்கனை பிரியாவின் மரணம் குறித்த வழக்கில் தேடப்பட்டு வரும் மருத்துவர்கள் முன்ஜாமின் மனு தாக்கல் செய்திருப்பதாக தகவல் வெளியாகியுள்ளன. 
 
சென்னையைச் சேர்ந்த கல்லூரி மாணவி பிரியா கால்பந்தாட்ட வீராங்கனை என்பதால் இவருக்கு காலில் அறுவை சிகிச்சை செய்யும் போது நேர்ந்த கவனக்குறைவு காரணமாக அவர் உயிரிழந்தார் என்பதும் தெரிந்ததே. 
 
இந்த நிலையில் தவறு செய்த டாக்டர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்ற குரல் ஒலித்து வரும் நிலையில் மருத்துவர்கள் திடீரென தலைமறைவானதாக இருப்பதாக கூறப்படுகிறது 
 
இந்த நிலையில் சம்பந்தப்பட்ட இரண்டு மருத்துவர்கள் மீது கவனக்குறைவாக உயிரிழப்பு ஏற்படுத்துதல் என்ற பிரிவின் கீழ் வழக்கு பதிவு செய்திருக்கும் நிலையில் இரண்டு மருத்துவர்களும் தற்போது முன்ஜாமின் மனு தாக்கல் செய்திருப்பதாக தெரிகிறது
 
சென்னை ஐகோர்ட்டில் இரு மருத்துவர்கள் தாக்கல் செய்த முன்ஜாமீன் மனுவில், ‘இந்த வழக்கில் விசாரணைக்கு முழு ஒத்துழைப்பு அளிப்பதாகவும் சாட்சிகளை கலைக்க மாட்டோம் என்றும் தெரிவித்துள்ளனர். இந்த மனு விரைவில் விசாரணைக்கு வர இருக்கும் நிலையில் இருவருக்கும் முன் ஜாமின் கிடைக்குமா என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்
 
Edited by Siva

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

ஈபிஎஸ் அவராக பேசவில்லை, அவரை யாரோ பேச வைக்கிறார்கள்: திருமாவளவன்

இந்தியா - பாகிஸ்தான் போரில் 5 போர் விமானங்கள் சுட்டு வீழ்த்தப்பட்டன.. டிரம்ப் மீண்டும் சர்ச்சை..!

கொழுந்தனுடன் கள்ளக்காதல்.. கணவனை மின்சாரம் பாய்ச்சி கொலை செய்த மனைவி.. அதிர்ச்சி சம்பவம்..!

போலி வேலைவாய்ப்பு மையம்.. வெளிநாட்டுக்கு கடத்தப்பட்ட 85 பேர் மீட்பு.. 20 பேர் கைது..!

பிரதமர் மோடி இங்கிலாந்து, மாலத்தீவு பயணம்: வர்த்தகம், உறவுகள் மேம்பாட்டில் புதிய அத்தியாயம்!

அடுத்த கட்டுரையில்
Show comments