Webdunia - Bharat's app for daily news and videos

Install App

சென்னை விமான நிலையத்திற்கு மின்னஞ்சல் மூலம் வெடிகுண்டு மிரட்டல்.. பயணிகள் பரபரப்பு!

Webdunia
வெள்ளி, 18 நவம்பர் 2022 (11:30 IST)
சென்னை விமான நிலையத்தில் வெடிகுண்டு மிரட்டல் மின்னஞ்சல் மூலம் வந்துள்ளதாக கூறப்படுவது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
 
சற்று முன்னர் சென்னை விமான நிலையத்திற்கு வந்த மின்னஞ்சல் ஒன்றில் சென்னை விமான நிலையத்துக்கு வெடிகுண்டு வைக்கப்பட்டுள்ளதாக கூறப்பட்டுள்ளது. இதனை அடுத்து பரபரப்பான விமான நிலைய அதிகாரிகள் உடனடியாக பாதுகாப்பு அதிகாரிகளிடம் தொடர்பு கொண்டு தகவல் கூறினர் 
 
இதனை அடுத்து பாதுகாப்பு அதிகாரிகள் தற்போது தீவிர சோதனையில் ஈடுபட்டு வருவதாகவும் ஆனால் விமான நிலையம் முழுவதும் சோதனை செய்ததில் எந்தவிதமான வெடிகுண்டு இல்லை என்பது உறுதி செய்யப்பட்டுள்ளதாகவும் தகவல்கள் வெளியாகி உள்ளன 
 
இதனை அடுத்து வெடிகுண்டு மிரட்டல் விடுத்த நபரை தேடும் பணியில் காவல்துறையினர் ஈடுபட்டு இருப்பதாகவும் அவர் அனுப்பிய மின்னஞ்சலில் இருந்து அந்த நபர் யார் என்பதை கண்டுபிடிக்கும் முயற்சியில் சைபர் க்ரைம் போலீசார் ஈடுபட்டு வருவதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன 
 
சென்னை விமான நிலையத்தில் வெடிகுண்டு மிரட்டல் வந்த தகவல் பயணிகள் மத்தியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது
 
Edited by Mahendran

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

கல்லூரி மாணவி மரணத்தில் சந்தேகம்.. உடலை வாங்க மறுத்த பெற்றோரால் பரபரப்பு..!

வரதட்சணை பணத்தை திருப்பி கொடுங்கள்.. மகள் பிணத்தை வைத்து போராடும் தாய்..!

அப்பா என்னை எதுவும் செய்யாதீர்கள்.. தந்தையால் பாலியல் வன்கொடுமைக்கு ஆளான 10 வயது சிறுமி..!

'டிரம்ப், நீங்கள் ஒரு பொய்யர்' என்று சொல்லுங்கள் பார்ப்போம்.. மோடிக்கு ராகுல் காந்தி சவால்..!

என் மகன் கல்லூரிக்கு செல்ல மாட்டான்.. சேட் ஜிபிடி கல்வியறிவே போதும்: சாம் ஆல்ட்மேன்

அடுத்த கட்டுரையில்
Show comments