Webdunia - Bharat's app for daily news and videos

Install App

பழனி முருகன் கோயில் சிலை முறைகேடு: ஐ.ஜி. பொன் மாணிக்கவேல் அதிரடியில் இருவர் கைது

Webdunia
திங்கள், 14 மே 2018 (07:50 IST)
பழனி முருகன் கோவிலில் உள்ள மூலஸ்தானத்தில் இருந்த நவபாஷன சிலையை அகற்றிவிட்டு அதற்கு பதிலாக 200 கிலோ புதிய ஐம்பொன் சிலை ஒன்றை வைக்க தேவஸ்தானம் கடந்த 2004ஆம் ஆண்டு முடிவு செய்தது.
 
ஆனால் இந்த முடிவில் நவபாஷனை சிலையை வெளிநாட்டுக்கு கடத்த திட்டமிடிருந்ததாக கூறப்பட்டது. அதேபோல் 200 கிலோ ஐம்பொன் சிலை செய்வதிலும் கோடிக்கணக்கில் முறைகேடு நடந்ததாகவும் குற்றம் சாட்டப்பட்டது.
 
இந்த நிலையில் இதுகுறித்து விசாரணை செய்த சிலை கடத்தல் தடுப்பு பிரிவு ஐ.ஜி. பொன் மாணிக்கவேல் தற்போது அதிரடியாக இரண்டு பேர்களை கைது செய்துள்ளார். அவர்கள் பழனிமுருகன் கோவில் உதவி ஆணையராக இருந்த புகழேந்தி மற்றும், தங்கநகை சரிபார்ப்பு அதிகாரி தேவேந்திரன் ஆகியோர்கள் ஆவர்
 
ஏற்கனவே பழனி முருகன் திருக்கோயிலுக்கு ஐம்பொன் தங்கத்தால் உற்சவர் சிலை செய்ததில் பல கோடி மோசடி நடந்ததாக கூறப்பட்ட புகாரின் அடிபப்டையில் ஸ்தபதி முத்தையா மற்றும் ராஜாவை சிலை கடத்தல் தடுப்பு பிரிவு ஐ.ஜி.யான பொன் மாணிக்கவேல் தலைமையிலான அதிகாரிகள் கைது செய்யப்பட்டனர் என்பதும் அவர்கள் தற்பொழுது நிபந்தனை ஜாமீனில் உள்ளனர் என்பதும் குறிப்பிடத்தக்கது.
 

தொடர்புடைய செய்திகள்

கை, கால்களில் கட்டப்பட்டிருந்த கம்பி.. ஜெயக்குமார் கொலை வழக்கில் திருப்பம்!

அகிலேஷ் யாதவ் சென்ற கோவிலை கங்கை நீர் கொண்டு சுத்தம் செய்த பாஜகவினர்..! ஷூ அணிந்தபடி வந்ததாக புகார்..!

தடையற்ற மும்முனை மின்சாரமா? முழுப் பூசணிக்காயை சோற்றில் மறைக்கும் அமைச்சர்.! அன்புமணி விமர்சனம்.!!

கடன் வாங்கிய மாணவரின் உறுப்பில் கல்லைக் கட்டி தொங்கவிட்டு கொடூரம்! – உத்தரபிரதேசத்தில் அதிர்ச்சி சம்பவம்!

திடீரென குடும்பத்துடன் வெளிநாட்டுக்கு சென்ற பினராயி விஜயன்.. காங்கிரஸ் கடும் விமர்சனம்..!

அடுத்த கட்டுரையில்
Show comments