Webdunia - Bharat's app for daily news and videos

Install App

காவிரி வழக்கு: இன்று சுப்ரீம் கோர்ட்டில் மீண்டும் விசாரணை

Webdunia
திங்கள், 14 மே 2018 (07:39 IST)
காவிரி மேலாண்மை வாரியம் குறித்த வழக்கு இன்று சுப்ரீம் கோர்ட்டில் மீண்டும் விசாரணைக்கு வரவுள்ளதை அடுத்து இன்றாவது தமிழக விவசாயிகளுக்கு நீதி கிடைக்குமா? என்ற எதிர்பார்ப்பில் ஒட்டுமொத்த தமிழகமும் உள்ளது.
 
காவிரி மேலாண்மை வாரியம் குறித்த வழக்கில் இன்று செயல் திட்ட அறிக்கையை சுப்ரீம் கோர்ட்டில் மத்திய அரசு தாக்கல் செய்யும் என எதிர்பார்க்கப்படுகிறது. கர்நாடக தேர்தல் காரணமாக ஒருசில காரணங்களை கூறி நாட்களை கடத்தி வந்த மத்திய அரசு, தற்போது தேர்தல் முடிந்துவிட்டதால் இன்றைய விசாரணையின்போது செயல்திட்ட அறிக்கையை தாக்கல் செய்யும் என எதிர்பார்க்கப்படுகிறது. பாஜக மூத்த தலைவர்களின் பேச்சுக்கள் இதனை உறுதி செய்துள்ளது.
 
மேலும் மத்திய நீர்வளத்துறை செயலாளார் யூ.பி.சிங் இன்று சுப்ரீம் கோர்ட்டில் நேரில் ஆஜராவார் என்றும், அவர் இன்று சுப்ரீம் கோர்ட்டில் காவிரி குறித்த செயல் திட்ட வரைவை தாக்கல் செய்வார் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது. அதுமட்டுமின்றி சுப்ரீம் கோர்ட் உத்தரவின்படி கர்நாடக அரசு இன்னும் தமிழகத்திற்கு 4 டி.எம்.சி தண்ணீரை திறந்துவிடவில்லை. இதுகுறித்தும் சுப்ரீம் கோர்ட் இன்று முக்கிய உத்தரவை பிறப்பிக்கும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது. மொத்தத்தில் ஒட்டுமொத்த தமிழகத்திற்கும் இன்று நீதி கிடைக்குமா? என்பது இன்னும் ஒருசில மணி நேரங்களில் தெரிந்துவிடும்

தொடர்புடைய செய்திகள்

மே முதல் வாரத்தில் தமிழகத்தில் கோடை மழை.. வானிலை ஆய்வு மையம் தகவல்..!

கோவை தேர்தல் முடிவுகளை வெளியிட கூடாது.! சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு..!!

நீர், கனிம வளத்துறை அதிகாரிகளுக்கு சம்மன்? அமலாக்கத்துறை அதிரடி முடிவு..!

மக்கள் பயன்பாட்டிற்கான ஆம்புலன்ஸை கொடியசைத்து தொடங்கி வைத்தார்- அமைச்சர் கே.என்.நேரு!

கண்மாய் மடையை தெய்வமாக வழிபடும் கிராம மக்கள்.280 ஆடுகள் பலியிடப்பட்டு 5 ஆயிரத்திற்கும் மேற்பட்ட ஆண்கள் மட்டும் பங்கேற்ற கிடா விருந்து!

அடுத்த கட்டுரையில்
Show comments