Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

பிக்பாஸ் நிகழ்ச்சியை தடை செய்ய வேண்டும்: மீண்டும் போர்க்கொடி தூக்கும் வேல்முருகன்..!

Advertiesment
பிக்பாஸ்

Mahendran

, செவ்வாய், 14 அக்டோபர் 2025 (17:14 IST)
நடிகர் விஜய் சேதுபதி தொகுத்து வழங்கும் 'பிக்பாஸ் சீசன் 9' நிகழ்ச்சி நடைபெற்று வரும் நிலையில், அதனைத் தடை செய்ய வேண்டும் என்று தமிழக வாழ்வுரிமைக் கட்சியின் தலைவர் வேல்முருகன் மீண்டும் வலியுறுத்தியுள்ளார்.
 
சென்னை செய்தியாளர் சந்திப்பில் பேசிய வேல்முருகன், "நீயா நானா போன்ற நன்மை பயக்கும் நிகழ்ச்சிகளை ஒளிபரப்பும் விஜய் தொலைக்காட்சிக்கு பாராட்டுகள். ஆனால், தமிழ்க் கலாச்சாரத்தையும், பண்பாட்டையும் சீரழிக்கும் 'பிக்பாஸ்' போன்ற நிகழ்ச்சிகளின் லாப நோக்கம் நிறுத்தப்பட வேண்டும். இந்த நிகழ்ச்சி உடனடியாகத் தடை செய்யப்பட வேண்டும்," என்று அவர் கோரிக்கை விடுத்தார்.
 
மேலும், "விரைவில் 'பிக்பாஸ்' நிகழ்ச்சி தடை செய்யப்படாவிட்டால், நிகழ்ச்சி நடைபெறும் தளத்தையும், விஜய் டிவி அலுவலகத்தையும் கட்சியின் மகளிர் அணியினர் முற்றுகையிடுவார்கள்," என்றும் அவர் கடுமையான எச்சரிக்கை விடுத்தார்.
 
Edited by Mahendran

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

காங்கிரஸ் கட்சியில் இணைந்த முன்னாள் ஐஏஎஸ் அதிகாரி.. கேரள தேர்தலில் போட்டியா?