தவெக கொடியை ஏற்றக்கூடாது: தொண்டர்களுக்கு தலைமை கடும் எச்சரிக்கை..!

Siva
ஞாயிறு, 25 ஆகஸ்ட் 2024 (13:41 IST)
அனுமதி இல்லாமல் தமிழக வெற்றி கழகத்தின் கொடியை ஏற்ற கூடாது என தொண்டர்களுக்கு அக்கட்சியின் தலைமை கடும் எச்சரிக்கை விடுத்துள்ளது.

தமிழக வெற்றி கழகம் என்ற அரசியல் கட்சியை கடந்த சில மாதங்களுக்கு முன் விஜய் தொடங்கிய நிலையில் சமீபத்தில் இந்த கட்சியின் கொடியை அவர் அறிமுகம் செய்தார். இரண்டு போர் யானைகள் மற்றும் வாகை மலருடன் கூடிய இந்த கொடி கட்சி தொண்டர்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்றது.

இந்த நிலையில் தமிழகம் முழுவதும் தமிழக வெற்றி கழகத்தின் கட்சியின் கொடி ஏற்றப்பட்டு வரும் நிலையில் மதுரையில் 50 அடி உயரத்தில் கொடிக்கம்பம் நட்டி  கொடியேற்ற அனுமதி கிடைக்கவில்லை என்று கூறப்படுகிறது.

இந்த நிலையில் தமிழக வெற்றி கழகத்தின் தலைமை இது குறித்து கூறிய போது அனுமதி இன்றி எங்கும் கொடியேற்றக்கூடாது என்று எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. எச்சரிக்கையை மீறும் கட்சி நிர்வாகிகள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என கட்சியின் தலைமை கூறியுள்ளதால் தமிழக வெற்றி கழகத்தின் தொண்டர்கள் மத்தியில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

Edited by Siva
 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

6 மாதமாக மிரட்டி தொடர் பாலியல் வன்கொடுமைக்கு ஆளான பெண்: ஈபிஎஸ் கண்டனம்..!

விஜய் கிரிக்கெட் பால் மாதிரி!.. அவருக்குதான் என் ஓட்டு!.. பப்லு பிரித்திவிராஜ் ராக்ஸ்!...

20 வருடங்களாக வைத்திருந்த உள்துறையை பாஜகவுக்கு தாரை வார்த்த நிதிஷ்குமார்.. என்ன காரணம்?

7ஆம் வகுப்பு மாணவி பள்ளி மாடியில் இருந்து விழுந்து உயிரிழப்பு: ஆசிரியர்கள் மீது பெற்றோர் குற்றச்சாட்டு

கோவை மெட்ரோ.. திருப்பி அனுப்பிய மத்திய அரசின் அறிக்கையில் 3 முக்கிய விளக்கம்.!

அடுத்த கட்டுரையில்
Show comments