Webdunia - Bharat's app for daily news and videos

Install App

புயல் காற்றால் கவிழ்ந்த படகு; நடுக்கடலில் தத்தளித்த மீனவர்கள்! – தூத்துக்குடியில் பரபரப்பு!

Webdunia
வியாழன், 12 மே 2022 (13:28 IST)
தூத்துக்குடியில் கடலில் வீசிய புயல் காற்றால் மீனவர்கள் சென்ற கப்பல் கவிழ்ந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

வங்க கடலில் கடந்த சில தினங்கள் முன்னதாக உருவான காற்றழுத்த தாழ்வு மண்டலம் அசானி புயலாக வலுவடைந்தது. இந்த புயல் ஒடிசா அருகே கரையை கடந்த நிலையில் பல்வேறு பகுதிகளில் மழை பெய்து வருகிறது.

இந்நிலையில் தூத்துக்குடி திரேஸ்புரம் பகுதியை சேர்ந்த 9 மீனவர்கள் கடலுக்கு படகில் சென்றுள்ளனர். கடலில் சங்கு குளிக்க சென்ற அவர்கள் சங்குகுளித்து கொண்டிருந்தபோது கடலில் பலத்த காற்று வீசியுள்ளது.

இதனால் கடலில் எழுந்த அலைகள் படகில் மோதியதில் படகில் ஓட்டை விழுந்தது. இதனால் கடலில் குதித்த மீனவர்கள் நீண்ட நேரமாக நீந்தி உயிருக்கு போராடியுள்ளனர். இந்த தகவலறிந்து அங்கு படகில் விரைந்த சக மீனவர்கள் அவர்களை பத்திரமாக மீட்டுள்ளனர். ஆனால் அவர்கள் சென்ற படகு முழுவதுமாக கடலில் மூழ்கியது. இந்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

தொடர்புடைய செய்திகள்

இன்றிரவு 27 மாவட்டங்களில் கொட்டப்போகுது கனமழை.. வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை..!

மோடி குறித்து பெருமையாக பதிவு செய்த ராஷ்மிகா மந்தனா.. பிரதமரின் நெகிழ்ச்சியான ரிப்ளை..!

ஆர்ப்பரித்த அருவி வெள்ளம்.. அடித்து செல்லப்பட்ட சிறுவன்! அலறி ஓடிய சுற்றுலா பயணிகள்! – தென்காசியில் அதிர்ச்சி சம்பவம்!

சென்னையில் செல்ஃபோன் ஆப் மூலமாக போதை மாத்திரை விற்பனை.. ஒரு அட்டை ரூ.2000.!

தவறை உணர்ந்துவிட்டேன்.. பெண் போலீசார் குறித்து பேசியது தவறுதான்: சவுக்கு சங்கர் வாக்குமூலம்..!

அடுத்த கட்டுரையில்
Show comments