Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

புயல் காற்றால் கவிழ்ந்த படகு; நடுக்கடலில் தத்தளித்த மீனவர்கள்! – தூத்துக்குடியில் பரபரப்பு!

Boat
, வியாழன், 12 மே 2022 (13:28 IST)
தூத்துக்குடியில் கடலில் வீசிய புயல் காற்றால் மீனவர்கள் சென்ற கப்பல் கவிழ்ந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

வங்க கடலில் கடந்த சில தினங்கள் முன்னதாக உருவான காற்றழுத்த தாழ்வு மண்டலம் அசானி புயலாக வலுவடைந்தது. இந்த புயல் ஒடிசா அருகே கரையை கடந்த நிலையில் பல்வேறு பகுதிகளில் மழை பெய்து வருகிறது.

இந்நிலையில் தூத்துக்குடி திரேஸ்புரம் பகுதியை சேர்ந்த 9 மீனவர்கள் கடலுக்கு படகில் சென்றுள்ளனர். கடலில் சங்கு குளிக்க சென்ற அவர்கள் சங்குகுளித்து கொண்டிருந்தபோது கடலில் பலத்த காற்று வீசியுள்ளது.

இதனால் கடலில் எழுந்த அலைகள் படகில் மோதியதில் படகில் ஓட்டை விழுந்தது. இதனால் கடலில் குதித்த மீனவர்கள் நீண்ட நேரமாக நீந்தி உயிருக்கு போராடியுள்ளனர். இந்த தகவலறிந்து அங்கு படகில் விரைந்த சக மீனவர்கள் அவர்களை பத்திரமாக மீட்டுள்ளனர். ஆனால் அவர்கள் சென்ற படகு முழுவதுமாக கடலில் மூழ்கியது. இந்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

அதிமுக கொண்டு வந்த சட்டமாக இருந்தாலும் அமல்படுத்துகிறோம்! – முதல்வர் மு.க.ஸ்டாலின்!