Webdunia - Bharat's app for daily news and videos

Install App

ஸ்டெர்லைட் வழக்குகள் இன்று விசாரணை: வைகோ ஆஜராகி வாதாடுகிறார்

Webdunia
புதன், 13 ஜூன் 2018 (08:07 IST)
தூத்துகுடியில் உள்ள ஸ்டெர்லைட் ஆலையை நிரந்தரமாக மூட வலியுறுத்தி கடந்த பல ஆண்டுகளாக போராட்டம் நடந்து வந்தாலும் சமீபத்தில் நடந்த போராட்டம் மிகவும் தீவிரமாக இருந்தது. இந்த போராட்டத்தின் 100வது நாளில் வன்முறை வெடித்ததால் போலீசார் துப்பாக்கி சூடு நடத்தினர். இந்த துப்பாக்கி சூடு சம்பவத்தில் 13 பேர் பரிதாபமாக பலியாகினர்.
 
இந்த நிலையில் இந்த துப்பாக்கி சூடு குறித்து 15 வழக்குகள் பதிவு செய்யப்பட்டது. இந்த வழக்குகள் அனைத்தும் இன்று விசாரணைக்கு வருகிறது. மேலும் ஸ்டெர்லைட்டுக்கு எதிரான வழக்கு ஒன்றில் உயர்நீதிமன்ற கிளையில் மதிமுக பொதுச்செயலாளர் வைகோ இன்று ஆஜராகி வாதாடுகிறார். அவர் ஸ்டெர்லைட்டுக்கு மாசு கட்டுப்பாட்டு வாரியம் தந்த அனுமதியை திரும்பப் பெற வேண்டும் என்று கோரி வழக்கு தொடர்ந்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
 
ஆனால் அவர் கோரியிருந்தவாறு ஏற்கனவே மாசு கட்டுப்பாட்டு வாரியம் ஸ்டெர்லைட்டுக்கு கொடுத்திருந்த அனுமதியை திரும்ப பெற்றுவிட்டதால் இந்த வழக்கு இன்று முடித்து வைக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

முதல்வர் வேட்பாளர் ஆகிறாரா சசிதரூர்.. கருத்துக்கணிப்பு என்ன சொல்கிறது?

5 நாட்களுக்கு தமிழகத்தில் மிதமான மழைக்கு வாய்ப்பு! - வானிலை ஆய்வு மையம்!

529 பேர் ஜூலை 15 முதல் வீட்டுக்கு போங்க.. இண்டெல் நிறுவனத்தின் அதிர்ச்சி அறிவிப்பு..!

மனைவியின் கழுத்தை அறுத்த கணவர்: கள்ளக்காதலனின் பிறப்புறுப்பு சிதைப்பு - ஒடிசாவில் பயங்கரம்!

மொத்தமாக கூகிள் ப்ரவுசர்க்கு முடிவுரை? AI Browserஐ அறிமுகப்படுத்தும் Open AI! - சூதானமாக கூகிள் செய்த அப்டேட்!

அடுத்த கட்டுரையில்
Show comments