Webdunia - Bharat's app for daily news and videos

Install App

அவசர அவசரமாக நிலம் கையகப்படுத்துவது ஏன்? டிடிவி தினகரன் கேள்வி!

Webdunia
வெள்ளி, 6 ஜூலை 2018 (20:06 IST)
சேலம் - சென்னை இடையே எட்டுவழிச்சாலை அமைக்க மத்திய மற்றும் மாநில அரசு முடிவு செய்துள்ளது. இந்த சாலை சேலம், கிருஷ்ணகிரி, தருமபுரி, திருவண்ணாமலை, காஞ்சிபுரம் ஆகிய மாவட்டங்கள் வழியாக அமைக்கப்படுகிறது.
 
இந்த எட்டுவழிச்சாலை திட்டத்திற்கு விவசாயிகள் மற்றும் சமூக ஆர்வலர்கள் பலர் எதிர்ப்பு தெரிவித்து வரும் நிலையிலும், இந்த திட்டத்திற்காக அவசர அவசரமாக நிலம் கையகப்படுத்தும் பணிகளில் தமிழக அரசு ஈடுபட்டுள்ளது. 
 
இந்நிலையில், எட்டு வழிச்சாலைக்கு எதிராக திருவண்ணாமலையில் டிடிவி தினகரன் தலைமையில் அமமுகவினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது அவர் பேசியது பின்வருமாறு, மக்கள் கேட்காத திட்டங்களை செயல்படுத்த மத்திய மாநில அரசுகள் துடிப்பது ஏன் என கேள்வி எழுப்பினார்.  
 
மேலும் எட்டு வழிச்சாலைக்கு அவசர அவசரமாக நிலம் எடுப்பது ஏன் என்றும் அவர் கேள்வி எழுப்பினார். 8 வழிச்சாலை விவகாரத்தில் முதல்வர் எடப்பாடி பழினிச்சாமி மாற்றி மாற்றி பேசி வருவதாகவும் அவர் பேசினார்.

தொடர்புடைய செய்திகள்

சிலந்தி ஆற்றின் குறுக்கே தடுப்பணை கட்டுவதா.? கேரள அரசுக்கு இபிஎஸ் கண்டனம்..!!

ராமரின் பக்தர்களுக்கும் துரோகிகளுக்கும் இடையிலான போர் தான் மக்களவை தேர்தல்: யோகி ஆதித்யநாத்

தயார் நிலையில் இருங்கள்..! மீனவர்களுக்கு கலெக்டர் போட்ட முக்கிய உத்தரவு..!!

சென்னையை பொருத்தவரை கோடைமழை ஒரு வரம்: தமிழ்நாடு வெதர்மேன்

என்னுடன் விவாதிக்க உறுதியாக வரமாட்டார்..! மோடியை சீண்டிய ராகுல் காந்தி.!!

அடுத்த கட்டுரையில்
Show comments