Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

எடப்பாடி பழனிச்சாமியை போல் காலையும் கழுத்தையும் பிடிக்கமாட்டேன்: டிடிவி தினகரன்

TTV Dinakaran
, வியாழன், 17 நவம்பர் 2022 (12:47 IST)
பதவிக்காக எடப்பாடி பழனிச்சாமி போல் நான் யாருடைய காலையும் பிடிக்க மாட்டேன் என்றும் அதேபோல் கழுத்தையும் பிடிக்க மாட்டேன் என்றும் அம்மா மக்கள் முன்னேற்ற கழகத்தின் பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் கூறியிருப்பது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது 
 
வரும் 2024 ஆம் ஆண்டு நாடாளுமன்றத் தேர்தலில் அதிமுக தலைமையில்தான் கூட்டணி அமையும் என்றும் ஆனால் அந்த கூட்டணியில் டிடிவி தினகரனையும் பன்னீர் செல்வத்தையும் சேர்க்க முடியாது என்றும் நேற்று எடப்பாடி பழனிச்சாமி திட்டவட்டமாக கூறி இருந்தார்
 
இதுகுறித்து கருத்து தெரிவித்த அம்மா மக்கள் முன்னேற்ற கழகத்தின் பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் பதவிக்காக எடப்பாடி பழனிச்சாமி போல் நான் யாருடைய காலையும் பிடிக்க மாட்டேன். அதேபோல் கழுத்தையும் பிடிக்க மாட்டேன் என்று கூறினார்
 
எடப்பாடி பழனிச்சாமி இடம் சேர்ந்து செயல்பட அரைக்கால் சதவீதம் கூட வாய்ப்பு இல்லை என்றும் அவர் கேள்விக்கு பதில்  கூறினார். மேலும் முதலமைச்சராக எடப்பாடி பழனிச்சாமி இருந்தபோதுகூட என் வீட்டுக்கு வந்து தான் அவர் என்னை சந்திப்பார் என்றும் நான் போய் அவரை பார்த்ததே இல்லை என்றும் அவர் பதிலடி கொடுத்துள்ளார் 
 
மேலும் அதிமுக தற்போது தலையில்லாத முண்டமாக உள்ளது என்றும் எங்கள் கட்சிக்கு பிரகாசமான எதிர்காலம் உள்ளது என்றும் தமிழ்நாடு முழுவதும் அம்மா மக்கள் முன்னேற்ற கழகம் வரும் தேர்தலில் மிகச்சிறந்த வாக்குகளை பெறும் என்றும் அவர் தெரிவித்தார்
 
Edited by Mahendran

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

வங்கி ஊழியர்கள் நாடு தழுவிய வேலை நிறுத்தம்: அதிரடி அறிவிப்பு