முதல்வர் வேட்பாளராக ஈபிஎஸ் இருந்தால் கூட்டணிக்கு வர மாட்டோம்: டிடிவி தினகரன்

Mahendran
திங்கள், 15 செப்டம்பர் 2025 (13:21 IST)
அ.ம.மு.க.வின் பொதுச் செயலாளர் டி.டி.வி. தினகரன், முன்னாள் முதல்வர் எடப்பாடி பழனிசாமி  முதலமைச்சர் வேட்பாளராக இருக்கும் வரை, தங்களது கட்சி தேசிய ஜனநாயக கூட்டணியில் சேர வாய்ப்பே இல்லை என்று திட்டவட்டமாக தெரிவித்துள்ளார்.
 
பேரறிஞர் அண்ணாவின் பிறந்தநாளை முன்னிட்டு தஞ்சாவூரில் உள்ள அண்ணா சிலைக்கு மாலை அணிவித்த பிறகு, செய்தியாளர்களை சந்தித்த தினகரன், "இந்த முறை அ.ம.மு.க. வெற்றி முத்திரை பதிக்கும்" என்று நம்பிக்கை தெரிவித்தார். 
 
மேலும், "நாங்கள் அங்கம் வகிக்கும் கூட்டணி, நிச்சயமாக ஆட்சி அமைக்கும். அதற்கான வெற்றி பொருள் மே மாதம் உங்களுக்குத் தெரியும்" என்று கூறினார்.
 
எடப்பாடி பழனிசாமியின் டெல்லி பயணம் மற்றும் செங்கோட்டையனின் காலக்கெடு குறித்த கேள்விகளுக்கு, "அது அவர்களது தனிப்பட்ட விவகாரம்" என்று பதிலளித்து, எந்த கருத்தையும் தெரிவிக்க மறுத்துவிட்டார்.
 
Edited by Mahendran

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

அதிக நேரம் Shorts பார்க்கும் பழக்கம்! கட்டுப்படுத்த யூட்யூப் எடுத்த முடிவு!

இந்தியாவின் முதல் வறுமையில்லாத மாநிலம்.. முதல்வர் பெருமிதம்..!

கல்வி துறைக்கு படித்த அமைச்சர் வேண்டும்: மத்திய அமைச்சர் சுரேஷ் கோபி பேச்சால் சர்ச்சை..!

வங்கக்கடலில் புதிய காற்றழுத்த தாழ்வு.. புயலாக மாற வாய்ப்பு உண்டா?

அடுத்த கட்டுரையில்
Show comments