Webdunia - Bharat's app for daily news and videos

Install App

நான் அப்பாவி.. சென்னை உயர்நீதிமன்றத்தில் டி.டி.எப்.வாசன் ஜாமின் மனு தாக்கல்..!

Webdunia
வியாழன், 5 அக்டோபர் 2023 (07:47 IST)
கடந்த சில நாட்களுக்கு முன்னால் பிரபல யூடியூபர் டி.டி.எப்.வாசன் ஆபத்தான முறையில் பைக் ஓட்டியதாக அவர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்ட நிலையில் அவர் சிறையில் அடைக்கப்பட்டார்.
 
இந்த நிலையில் ஏற்கனவே இரண்டு முறை அவருடைய ஜாமின் மனு தள்ளுபடி செய்யப்பட்ட நிலையில் சமீபத்தில் அவர் காஞ்சிபுரம் நீதிமன்றத்தில் காணொலி காட்சி மூலம் அவர் ஆஜர்படுத்தப்பட்டார். அப்போது அவரது நீதிமன்றக் காவலை மேலும் 15 நாட்கள் நீட்டித்து நீதிபதி உத்தரவு பிறப்பித்துள்ளார்.
 
 இந்த நிலையில் TTF வாசன் தரப்பிலிருந்து சென்னை உயர்நீதிமன்றத்தில் ஜாமீன் மனு தாக்கல் செய்யப்பட்டு உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
 
நெடுஞ்சாலையில் விபத்து ஏற்படுத்திய வழக்கில் கைது செய்யப்பட்ட யூடியூபர் டி.டி.எப்.வாசன், சென்னை உயர்நீதிமன்றத்தில் ஜாமின் கோரி மனுத்தாக்கல் செய்துள்ளதாகவும், அந்த மனுவில் தான் அப்பாவி, எந்தக் குற்றத்திலும் ஈடுபடவில்லை என்றும், நீதிமன்றம் விதிக்கும் நிபந்தனைகளுக்கு கட்டுப்படுவதாகவும் மனுவில் தெரிவித்துள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது
 
Edited by Siva

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

ஒரே நாடு ஒரே கணவர் திட்டமா? பஞ்சாப் முதல்வர் ஆவேசம்..!

மதுரை சுங்கச்சாவடியில் கட்டணம் வசூலிக்க தடை: உயர்நீதிமன்றம் அதிரடி உத்தரவு.

உலக நாடுகளின் ஆதரவை பெற்றுள்ளோம்: சென்னை திரும்பிய கனிமொழி பேட்டி..!

நீட் மறு தேர்வு நடத்த முடியாது.. மத்திய அரசு வாதம்.. ஜூன் 6ஆம் தேதி தீர்ப்பு..!

யார் அந்த சார்? 8 கேள்விகள் கேட்ட நயினார் நாகேந்திரன்.. பதிலுக்காக காத்திருப்போம்!

அடுத்த கட்டுரையில்
Show comments