Webdunia - Bharat's app for daily news and videos

Install App

திருச்சி சூர்யா பாஜகவில் இருந்து விலகல்!

Webdunia
செவ்வாய், 6 டிசம்பர் 2022 (14:28 IST)
திருச்சி சூர்யா  பாஜகவில் இருந்து விலகுவதாக அறிவித்துள்ளார்.

பாஜக நிர்வாகி  திருச்சி சூர்யாவுக்கும், பாஜகவின் சிறுபான்மை பிரிவு மாநில தலைவர் டெய்சி சரணுக்கும் இடையிலான ஆடியோ சமீபத்தில் வெளியாகி சர்ச்சை ஏற்பட்டது.

இதையடுத்து, டெய்சிக்கு மிரட்டல் விடுத்த திருச்சி சூர்யாவை , பாஜக மாநில தலைவர் அண்ணாமலை  கட்சியின் அனைத்துப் பொறுப்புகளில் இருந்து நீக்கி உத்தரவிட்டிருந்தார்.

இந்த நிலையில், இன்று பாஜகவில் இருந்து விலகுவதாக திருச்சி சூர்யா அறிவித்துள்ளார்.

இதுகுறித்து, அவர் தன் டுவிட்டர் பக்கத்தில், ‘’அண்ணன் அண்ணாமலை அவர்களுக்கு நன்றி , இதுவரை இந்த கட்சியில் பயணித்தது எனக்கு கிடைத்த இனிய அனுபவம் . நீங்கள் தமிழக பாஜகவிற்கு கிடைத்த மிகப்பெரிய பொக்கிஷம் . வரக்கூடிய தேர்தலில் கண்டிப்பாக பாஜக இரட்டை இலக்கை அடையும் .


ALSO READ: பாஜக நிகழ்ச்சிகளில் பங்கேற்க தடை: சூர்யா சிவாவுக்கு அண்ணாமலை உத்தரவு
 
அதை அடைய வேண்டும் என்றால் மாநில அமைப்பு பொதுச் செயலாளர் @kesavavinayagam அவர்கள் மாற்றப்பட வேண்டும் .

இல்லையென்றால் கடந்த கால பாஜகவை போலவே தமிழகத்தில் பாஜக நீடிக்கும் . இத்துடன் என் பாஜக உடனான உறவை நான் முடித்துக் கொள்கிறேன் . உங்கள் மேல் என்றும் அன்புள்ள அன்பு தம்பி’’ என்று தெரிவித்துள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

துணை முதல்வராகும் உதயநிதி… சீனியர் அமைச்சர்களின் இலாக்கா மாற்றம்!

சாத்தூர் அருகே பட்டாசு ஆலை வெடி விபத்து!

புரட்டாசி மாதம் இரண்டாம் சனிக்கிழமை- திருவந்திபுரம் தேவநாத சுவாமி கோவிலில் நீண்ட வரிசையில் காத்திருந்து சாமி தரிசனம் செய்த பக்தர்கள்....

தமிழக மீனவர்களுக்காக குரல் கொடுத்த ராகுல்.! மத்திய அமைச்சருக்கு கடிதம்.!!

மீண்டும்‌ மீண்டும் சொத்து வரியை உயர்த்தும் நிர்வாக திறனற்ற அரசு! ஜெயகுமார் கண்டனம்

அடுத்த கட்டுரையில்
Show comments