Webdunia - Bharat's app for daily news and videos

Install App

திருச்சி சூர்யா பாஜகவில் இருந்து விலகல்!

Webdunia
செவ்வாய், 6 டிசம்பர் 2022 (14:28 IST)
திருச்சி சூர்யா  பாஜகவில் இருந்து விலகுவதாக அறிவித்துள்ளார்.

பாஜக நிர்வாகி  திருச்சி சூர்யாவுக்கும், பாஜகவின் சிறுபான்மை பிரிவு மாநில தலைவர் டெய்சி சரணுக்கும் இடையிலான ஆடியோ சமீபத்தில் வெளியாகி சர்ச்சை ஏற்பட்டது.

இதையடுத்து, டெய்சிக்கு மிரட்டல் விடுத்த திருச்சி சூர்யாவை , பாஜக மாநில தலைவர் அண்ணாமலை  கட்சியின் அனைத்துப் பொறுப்புகளில் இருந்து நீக்கி உத்தரவிட்டிருந்தார்.

இந்த நிலையில், இன்று பாஜகவில் இருந்து விலகுவதாக திருச்சி சூர்யா அறிவித்துள்ளார்.

இதுகுறித்து, அவர் தன் டுவிட்டர் பக்கத்தில், ‘’அண்ணன் அண்ணாமலை அவர்களுக்கு நன்றி , இதுவரை இந்த கட்சியில் பயணித்தது எனக்கு கிடைத்த இனிய அனுபவம் . நீங்கள் தமிழக பாஜகவிற்கு கிடைத்த மிகப்பெரிய பொக்கிஷம் . வரக்கூடிய தேர்தலில் கண்டிப்பாக பாஜக இரட்டை இலக்கை அடையும் .


ALSO READ: பாஜக நிகழ்ச்சிகளில் பங்கேற்க தடை: சூர்யா சிவாவுக்கு அண்ணாமலை உத்தரவு
 
அதை அடைய வேண்டும் என்றால் மாநில அமைப்பு பொதுச் செயலாளர் @kesavavinayagam அவர்கள் மாற்றப்பட வேண்டும் .

இல்லையென்றால் கடந்த கால பாஜகவை போலவே தமிழகத்தில் பாஜக நீடிக்கும் . இத்துடன் என் பாஜக உடனான உறவை நான் முடித்துக் கொள்கிறேன் . உங்கள் மேல் என்றும் அன்புள்ள அன்பு தம்பி’’ என்று தெரிவித்துள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

கலாச்சாரத்தை சீரழிக்கும் நைட் டான்ஸ் பார்கள்? துவம்சம் செய்த நவநிர்மான் சேனாவினர்!

திருமணமான 40 வயது நபருடன் லிவிங் டுகெதரில் இருந்த இளம்பெண்.. திடீரென செய்த கொலை..!

நயினார் வீட்டில் எடப்பாடியாருக்கு விருந்து.. 109 வகை மெனு! - அண்ணாமலை ஆப்செண்ட்?

பீகார்ல வீடு இருக்கவன்.. எப்படி தமிழ்நாட்டுல ஓட்டு போட முடியும்? - ப.சிதம்பரம் கேள்வி!

என்னை திட்டினாலும் திரும்ப திட்ட மாட்டேன்! ஓபிஎஸ்ஸிடம் அமைதி காக்கும் நயினார்!

அடுத்த கட்டுரையில்
Show comments