Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

கடுமையான பக்கவிளைவால் மக்கள் அவதி! - கொரோனா தடுப்பூசிக்கு 9 நாடுகள் தடை!

கடுமையான பக்கவிளைவால் மக்கள் அவதி! - கொரோனா தடுப்பூசிக்கு 9 நாடுகள் தடை!
, செவ்வாய், 16 மார்ச் 2021 (08:35 IST)
உலகம் முழுவதும் கொரோனா பாதிப்புக்கு எதிரான தடுப்பூசிகள் பயன்பாட்டில் உள்ள நிலையில் பக்கவிளைவுகள் காரணமாக ஆஸ்டிரா ஜெனிகா தடுப்பூசிக்கு சில நாடுகள் தடை விதித்துள்ளன.

உலகம் முழுவதும் கொரோனா வைரஸால் பல கோடி மக்கள் பாதிக்கப்பட்டுள்ள நிலையில் உலக நாடுகள் பல பல்வேறு தடுப்பூசிகளை கொரோனாவை தடுக்க மக்களுக்கு வழங்கி வருகின்றன. இந்நிலையில் இங்கிலாந்தின் ஆஸ்டிரா ஜெனிகா நிறுவனம் தயாரித்த தடுப்பூசியும் பல்வேறு நாடுகளில் செலுத்தப்பட்டு வருகிறது.

இந்நிலையில் நெதர்லாந்தில் ஆஸ்டிரா ஜெனிகா தடுப்பூசி போட்டுக்கொண்ட பெண் உயிரிழந்ததாக வெளியான தகவல் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. தொடர்ந்து டென்மார்க், நார்வே உள்ளிட்ட நாடுகளிலும் இந்த தடுப்பூசியை போட்டு கொண்டவர்களுக்கு கடுமையான பக்க விளைவுகள் ஏற்படுவதாக செய்திகள் வெளியாகின.

இந்நிலையில் நார்வே, நெதர்லாந்து, டச்சு, டென்மார்க் உள்ளிட்ட 9 நாடுகளில் இந்த தடுப்பூசியை பயன்படுத்த தடை விதிக்கப்பட்டுள்ளது.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

மாணவிகளின் பெற்றோருக்கும் கொரோனா பாதிப்பு! – அதிர்ச்சியில் அம்மாப்பேட்டை