Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

போன வாரம் கிஸ், இந்த வாரம் ஆளே மிஸ்: எஸ்.ஐ-யின் லீலைகள்

போன வாரம் கிஸ், இந்த வாரம் ஆளே மிஸ்: எஸ்.ஐ-யின் லீலைகள்
, சனி, 22 டிசம்பர் 2018 (12:27 IST)
கடந்த வாரம் திருச்சியில் நைட் டியூட்டியின் போது சப் இன்ஸ்பெக்டர் பெண் போலீஸை முத்தமிட்ட சம்பவம் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது. தற்போது இந்த சப் இன்ஸ்பெக்டர் வேறு ஒரு பெண்ணுடன் எஸ்கேப் ஆகியுள்ளார். 
 
திருச்சியை சேர்ந்த பாலசுப்பிரமணி (50) என்பவர் சோமரசம்பேட்டை காவல் நிலையத்தில் எஸ்.எஸ்.ஐ.யாக பணிபுரிந்து வருகிறார். இவர் நைட் டியூட்டியின் போது அங்கிருந்த பெண் போலீஸிடம்,  சில்மிஷத்தில் ஈடுபட்டார். 
 
இதனையடுத்து அந்த எஸ்.ஐ சஸ்பெண்ட் செய்யப்பட்டார். பின்னர் அவரிடம் நடைபெற்ற விசாரணையில், பெண் போலீஸின் சம்மதத்துடனே இது நடைபெற்றதாக கூறினார். ஆனால் அந்த பெண் காவலரிடம் விசாரித்த போது அவர் வலுக்கட்டாயமாக என்னிடம் அப்படி நடந்துக்கொண்டார் என தெரிவித்தார். 
 
இதனால், பெண் போலீஸை பணி செய்யவிடாமல் தடுத்தது, பாலியல் தொந்தரவு கொடுத்தது, மிரட்டல் விடுத்தது என 3 பிரிவுகளின் கீழ் பாலசுப்பிரமணியன் மீது சோமரசம்பேட்டை போலீஸார் வழக்கு பதிவு செய்தனர்.
 
எப்படியும் தன்னை கைது செய்துவிடுவார்கள் என தெரிந்துக்கொண்ட பாலசுப்பிரமணி முன்ஜாமினுக்கும் முயற்சி செய்தார். அவருக்கு ஏற்கனவே ஒரு பெண்ணுடன் தகாத உறவு இருந்துவந்துள்ளது.  
 
இந்நிலையில், பாலசுப்பிரமணி அந்த பெண்ணுடன் எஸ்கேப் ஆகியுள்ளார். மூன்று நாட்களாக தலைமறைவாக உள்ள அவரை போலீஸார் தேடி வருகின்றனர். 

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

ஆபிஸில் உல்லாசம்: அரசு அலுவலகத்தில் நடந்த லீலைகள்; மதுரையில் பரபரப்பு