Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

லாக்கப் டெத்: விசாரணைக்கு போன இடத்தில் விபரீதம்; சென்னையில் பதற்றம்

லாக்கப் டெத்: விசாரணைக்கு போன இடத்தில் விபரீதம்; சென்னையில் பதற்றம்
, சனி, 22 டிசம்பர் 2018 (11:26 IST)
சென்னையில் விசாரணைக்கு அழைத்து செல்லப்பட்ட இளைஞர் மர்மமான முறையில் இறந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
சென்னை கொருக்குப்பேட்டை ஜெ.ஜெ.நகரை சேர்ந்தவர் ஜெயக்குமார்(20). இவர் பிராட்வேயில் உள்ள ஹார்டுவேர்ஸ் கடையில் வேலை பார்த்து வந்தார். அவர் வேலை பார்த்து வந்த கடையின் மேல் பகுதியில் உள்ள வீட்டில் கொள்ளை போனது. இதுகுறித்து விசாரிக்க எஸ்பிளனேடு போலீஸ் ஜெயக்குமாரை காவல் நிலையத்திற்கு அழைத்து சென்றனர்.
 
இந்நிலையில் ஜெய்குமாரின் வீட்டிற்கு போன் செய்த போலீஸார் லாக்கப்பில் ஜெயக்குமார் உடல்நலக்குறைவால் இறந்து விட்டதாக தெரிவித்தனர். இதனைக்கேட்டு அதிர்ச்சியடைந்த பெற்றோர் உறவினர்களுடன் காவல் நிலையத்திகு முன் ஆர்ப்பாட்டம் நடத்தினர். போலீஸார் தான் தங்கள் மகனை திட்டமிட்டு கொலை செய்தனர் என பெற்றோர் குற்றம் சுமத்தியுள்ளனர்.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

ரஜினி இன்று அமெரிக்கா பயணம் ! ஏன் தெரியுமா...?